சிஐடியு, விச, வி.தொ.ச, வாலிபர் சங்க கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானம்
மே 20 இல் பொது வேலைநிறுத்தம்
அரியலூர், மே 9- மே 20 இ,ல் அரியலூர், செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் உள்ளிட்ட 6 ஒன்றியங்களில் மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து, பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் செய்ய சிஐடியு, விச, வி.தொ.ச, வாலிபர் சங்க கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிஐடியு, விச, விதொச, வாலிபர் சங்க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம். வெங்கடாசலம், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். ரவீந்தரன், வி.தொ.ச மாவட்டச் செயலாளர் எ.கந்தசாமி, சிஐடியு நிர்வாகிகள் கண்ணன், எஸ்.மெய்யப்பன், இ.பி.ஆறுமுகம், ஆண்டிமடம் வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் அருணாசலம், தா.பழுர் வி.தொ.ச பன்னீர்செல்வம், கருப்பையா, விச.ஒன்றியச் செயலாளர் டி.தியாகராஜன், பி.ஆர். தனவேல், மாவட்டக் குழு எஸ்.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மே 20 இல் நடைபெறும் அகில இந்திய பொதுவேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தை ஜெயங்கொண்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது எனவும், மே 18 இல் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ஆட்டோ பிரச்சாரம் செய்வது. மேலும். அரியலூர், ஜெயங்கொண்டம் செந்துறை, திருமானூர், தா.பழூர். ஆண்டிமடம் உள்ளிட்ட 6 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதியில் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.