சென்னை, அக். 27 - ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் வாலி பர்களும், மாணவர்களும் வியாழ னன்று (அக்.27) போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, குடியரசுத் தலைவரிடம் 112 பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில் பெரும்பாலான பரிந்துரைகள் இந்தி மொழியை திணிக்கும் வகையில் உள்ளன. குறிப்பாக, ஒன்றிய கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி மட்டுமே பயிற்று மொழியாகவும், ஆங்கிலம் விருப்ப மொழியாக மட்டுமே இருக்கும் என்றும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இந்தி பேசாத மாநிலங்களின் மாண வர்களை ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களுக்குள் அனுமதி மறுக்கும் வகையில் இந்த பரிந்துரை உள்ளது. இந்து - இந்தி - இந்துஸ்தான் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோட்பா ட்டை திணிக்கும் வகையில், அரசிய லமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பரிந்துரைகள் அமைந்துள்ளன. நாட்டின் அமைதி, ஒற்றுமையை சீர்கு லைக்கும் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கைவிட வேண்டும், அர சியல் சாசனத்தின் எட்டாவது அட்ட வணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஒன்றிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி போராட்டம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் அறைகூவல்விடுத்தன.
சென்னை
இதனையொட்டி தமிழகம் முழு வதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சலம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டவர்கள், திடீரென அமித்ஷா வின் உருவ பொம்மை, படத்தை எரித்து முழக்கமிட்டபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையொட்டி ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிலர் காயமடைந்தனர்.
அண்ணாமலை கபட நாடகம்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், “உள்துறை அமைச்சர் அமித்ஷா குழு பரிந்துரை கல்வியில் இந்தியை திணிக்கும் வகையில் உள்ளது. ஒன்றிய அலுவலக நிகழ்வுகளையும், நீதி மன்ற தீர்ப்புகளையும் இந்தியில் வெளி யிடவும் பரிந்துரைத்துள்ளது. பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் மாநிலங்களுக்குள் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது. இதனை ஏற்க முடியாது. இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கபட நாடகம் ஆடுகிறார். தமிழக அர சை சீர்குலைக்க முயற்சித்து வரு கிறார். ஒருபோதும் அவர் இந்தி திணிப்பை எதிர்க்கவில்லை. இந்தியை அமல்படுத்த மறைமுக இயக்கத்தை நடத்துகிறார்” என்று குற்றம்சாட்டினார்.
இந்தியை திணிக்காதே!
மாணவர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் க.நிருபன் சக்ரவர்த்தி குறிப்பிடு கையில், “ஒரு மொழியை மற்றொரு மொழி பேசுவோர் மீது திணிக்கக் கூடாது. கல்வி, வேலை உள்ளிட்ட நடவடிக்கைகளில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது” என்றார். இந்தப் போராட்டத்தில் வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கே.மணி கண்டன், பார்த்திபன், நந்தினி (மத்திய சென்னை), நித்யராஜ், எல்.பி.சரவண தமிழன், விஜயகுமார், தமிழ்ச்செல்வி (வடசென்னை), தீ.சந்துரு, திவாகர், ஏ.ஜானகிதேவி (தென்சென்னை), மாணவர் சங்க நிர்வாகிகள் அருண் குமார், மிருதுளா, தமிழ் (மத்திய சென்னை), காவியா, நிதிஷ், குணா (வடசென்னை), எஸ்.ஆனந்த், ரா.பாரதி, பு.கா.புகழ்ச்செல்வி (தென் சென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.