tamilnadu

img

12 மணி நேர வேலைக்கு எதிர்ப்பு மதுரையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூன் 4- அரசுத் துறையில் அனைத்து காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். பொது சுகாதா ரம், மருத்துவம் மற்றும் உள் ளாட்சித் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். பணி நேரத்தை 12 மணி நேரமாக மாற் றும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோய் பரவலை கார ணம்காட்டி ஊதியம் வெட்டு, சரண் விடுப்பு ரத்து, வேலை நிய மன தடை, அகவிலைப்படி ரத்து, பொது வருங்கால வைப்பு நிதி யில் இருந்து பணம் எடுப்பது நிறுத்தி வைப்பு, பயணப்படி ரத்து, விடுப்பு கால சலுகைகள் ரத்து என்ற ஊழியர் விரோத போக்கை கைவிட வேண்டும் ஊழியர்கள் ஓய்வூதிய வயது உயர்வு நடவடிக்கையை அரசு உடனடியாக கைவிட வேண்டு மென வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மதுரை பொதுப்பணித்துறை அலுவல கத்தில் உணவு நேர இடைவேளை ஆர்ப்பாட்டம் வியாழனன்று நடை பெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.செல்வம், மாநிலத் துணைத் தலைவர் மொ.ஞானத்தம்பி, மாவட்டத் தலைவர் ஜெ.மூர்த்தி, மாவட்டச்செயலாளர் க.நீதி ராஜா, மாவட்டப் பொருளாளர் மு. ராம்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மாவட்டத் தலைவர் விஜயகுமார், மாவட்டச் செய லாளர் முபாரக் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.