districts

img

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்திடுக! அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், ஏப்.23 - புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூ திய திட்டத்தை அமலாக் கிட வேண்டும். கொரோ னாவை காரணம் காட்டி 2  ஆண்டுகளாக முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்புவிப்பை மேலும் காலம் தாழ்த்தாமல் தடை செய்வதை உடன டியாக திரும்ப பெற வேண்டும். சாலைப் பணியா ளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத் தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் குளித்தலை, வேலா யுதம்பாளையம், கடவூர்,  அரவக்குறிச்சி, கிருஷ்ண ராயபுரம், மண்மங்கலம் ஆகிய வட்டாட்சியர் அலுவல கம் முன்பும், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ஞானதம்பி, வரு வாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் அன்பழகன் மாவட்ட செய லாளர் கே.சக்திவேல், மாவட்டப் பொருளாளர் பொன் ஜெயராம், மாநில துணை செயலாளர் செல்வராணி, மாவட்ட துணை தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.