சென்னை,அக்.26- வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகு திகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் அக்டோபர் 25 வெள்ளிக்கிழமையன்று ஒரே நாளில் 10 செ.மீ அள வுக்கு மழை கொட்டித் தீர்த் தது. அதிலும் 15 நிமிடத்தில் 45 மி.மீ மழை பெய்தது. இந்த கனமழை காரண மாக பல்வேறு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. குடியி ருப்புகளில் மழைநீர் சூழ்ந்து, மக்கள் வெளியே வர முடி யாமல் அவதிக்குள்ளாகி யுள்ளனர். இதனைத் தொ டர்ந்து அன்று இரவே அமைச் சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடு பட்டனர். அமைச்சர் பி. மூர்த்தி,மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா பாதிக்கப்பட்ட பகு திகளில் மக்களை சந்தித்து, மீட்புப்பணிகளை மேற் கொண்டனர்.
சு.வெங்கடேசன் எம்.பி.,கோரிக்கை
பாதிக்கப்பட்ட பகுதிக ளில் போர்க்கால அடிப்படை யில் தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி, வலியுறுத்தினார். வெள்ளிக்கிழமை (அக். 25) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச் சர்கள், அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஆலோ சனையில் ஈடுபட்டார். இந்த நிலையில், மதுரை மாநகரின் பல்வேறு பகுதிக ளில் பாதிப்பு ஏற்பட்டுள் ளதை அறிந்து, உடனடி யாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச் சர்கள் மற்றும் அதிகாரிக ளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள் ளார். இது குறித்து முதல்வர் தனது சமூக வலைதள பதி வில், “மதுரை மாவட்டத்தில் நேற்று (வெள்ளி) பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற் பட்டுள்ளதை அறிந்து, உட னடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவ டிக்கைகளை மேற்கொள்வ தற்காக அமைச்சர்களை அனுப்பி வைத்தேன். மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப் பட்டுள்ளன. மேலும் பாதிக் கப்பட்ட பகுதி மக்கள் தேவை யான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பா கத் தங்க வைக்கப்பட்டுள்ள னர். மாவட்டத்தின் கண்கா ணிப்பு அலுவலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண் மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்ற னர். மதுரை மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: முதல்வர்
சென்னை அண்ணா அறி வாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டி யில்; மதுரையில் முழு வீச்சில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறேன். சென்னையில் இருந்து மதுரைக்கு அதி காரிகளை அனுப்பி வைத்தி ருக்கிறோம். அனைத்து ஊர்களிலும் மாநகராட்சி சார்பில் அனை த்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றும் கனமழை பெய் யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மது ரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. மதுரை யில் சில இடங்கள் மட்டுமே மழையால் பாதிக்கப் பட்டுள்ளன. மதுரையில் உள்ள அமைச்சர் மூர்த்தி, ஆட்சியரிடம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தேன். மது ரையில் 8 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.