சென்னை, ஏப்.15- ஊரக வேலைத்திட்டப் பணித்தள பொறுப்பாளர் நாகலட்சுமியின் தற்கொலை, ஊரக வேலை திட்டத்தில் தமிழ்நாடு முழு வதும் தொடரும் முறைகேடுகளின் சாட்சிய மாக விளங்குகிறது. இந்தத் திட்டத்தினை முறையாக அமல்படுத்திட முதலமைச்சர் நேரடியாக தலையீடு செய்திட வேண்டு மென அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 18.04.2023 அன்று தமிழ்நாடு முழு வதும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் அறை கூவல் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சனியன்று ( ஏப்ரல்15 ) தமிழ்நாடு அரசு சார்பில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உள்ளிட்டோர், அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர் உள் ளிட்டோர் நடத்திய பேச்சு வார்த்தையில் அர சின் கவனத்திற்கு கொண்டு சென்று சாத்தி யமான கோரிக்கைகளை நிறைவேற்றுவ தாக உறுதி அளித்தனர். இதனால் போராட்ட டம் விலக்கிக் கொள்ளப்பட்டு நாகலட்சுமி உடலை பெற்று அடக்கம் செய்யப்பட்டது.
ஏப்ரல் 18 அன்று நடைபெற இருந்த மாநி லந் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டமும் தற் காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. முதலமைச்சர் தலையிடுக! தமிழ்நாட்டில் உள்ள 92 லட்சம் ஊரக வேலை திட்டத்தின் பயனாளிகளின் நலனை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு திட்டத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்திட வேண்டும். முதலமைச்சர் நேரடி யாக தலையீடு செய்திட வேண்டும். ஊரக வேலைத்திட்டத்தில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர்கள் 80 சத வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக உள்ளனர். வேலைக்கு வராமல் இருக்கும் தனக்கு வேண்டியவர்களின் பெயர்களை சேர்த்து போலி கணக்குகளை எழுத வேண் டும் என்று நிர்ப்பந்திக்கப்படும் - மிரட் டப்படும் நிலையும் மாநில முழுவதும் உள்ளாட்சி நிர்வாகிகளால் தொடர்கி றது. இதை தடுத்திடவும், பணித்தள பொறுப் பாளர்களுக்கென அரசு வகுத்துள்ள விதி முறைகளை அனைத்து ஊராட்சிகளிலும் கறாராக கடைப்பிடித்திடவும் உரிய நடவடிக் கைகளை தமிழ்நாடு அரசும் -ஊரக வளர்ச்சித் துறையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.