tamilnadu

img

பனங்கருப்பட்டிக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக் கோரிக்கை

பனங்கருப்பட்டிக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக் கோரிக்கை

கோபிசெட்டிபாளையம் பகுதி யில் பனங்கருப்பட்டி உற்பத்தி குறைந்து வருவதால், தற்போது நடைபெற்று வரும் நிதியறிக்கை யில் பனங்கருப்பட்டிக்கு உரிய  விலை நிர்ணயம் செய்ய வேண்டும்  என பனைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள சிறுவ லூர் சுற்றுப்புற பகுதிகளான பதிப் பாளையம், ஆயிபாளையம், கொளப்பலூர், வெட்டையன் கிணறு, கவுண்டம்பாளையம், மீன் கிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் 300க்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளர்கள் கருப்பட்டி உற் பத்தி செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் மார்ச் மாதத் தில் பனை மரங்களில் இருந்து கிடைக்கும் பதனீரை சேகரித்து காய்ச்சி கருப்பட்டி உற்பத்தி செய்து வருகின்றனர். சிறுவலூர் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில  நாட்களாக அவ்வப்போது மழை  குறுக்கிடுவதால் பனை மரங்களில்  குறைந்த அளவு பதனீர் மட்டுமே கிடைக்கிறது. இதனால் நாளொன்றுக்கு 15 லிட்டர் முதல் 20 லிட்டர் பதனீர் மட்டுமே கிடைப்பதால் குறைந்த அளவு பனங்கருப்பட்டி மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. பனங் கருப்பட்டிக்கு தற்போது கிலோ 190  ரூபாய் மட்டுமே விற்பனை ஆகி றது. பனங்கருப்பட்டி உற்பத்தி செய்ய இரண்டு ஆட்கள் நாள் முழு வதும் உழைத்தாலும் பனங்கருப் பட்டிக்கு போதிய விலை இல்லை  என்பதால் பனைத் தொழிலாளர்கள்  மாற்று தொழிலுக்கு சென்று விட் டனர். குறைந்த பனை தொழிலா ளர்கள் மட்டுமே பனங்கருப்பட்டி உற்பத்தி செய்வதால் சிறுவலூர் பகுதியில் இந்த ஆண்டு பனங் கருப்பட்டி உற்பத்தி குறைந்துள் ளது. வழக்கமாக மார்ச் மாத  பாதியில் கருப்பட்டி உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஒன்றை டன் பனங்கருப்பட்டி கொள் முதல் செய்யப்படும். ஆனால், இது வரை கூட்டுறவு சங்கத்திற்கு 350 கிலோ மட்டுமே கொள்முதல் செய் யப்பட்டுள்ளது. எனவே, பனைத் தொழிலாளர் களை காக்கவும் மருத்துவ குணம் நிறைந்த பனங்கருப்பட்டிக்கு கிலோ  ரூ.250க்கும் தென்னங்கருப்பட்டி கிலோ ரூ.200க்கும் விலை நிர்ண யம் செய்ய அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பனைத் தொழி லாளர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். மேலும், தமிழக அரசு பனைத் தொழிலாளர் நல வாரியம்  அமைத்து எர்ணாவூர் நாராயணன்  தலைவராக அறிவிக்கப்பட்டு  பனைத் தொழிலாளர்களின் நலன்  காக்கப்படும் என அறிவித்த அரசு  இதுவரை பனைத் தொழிலாளர்க ளுக்கு வாரியத்தின் மூலம் எந்த திட்ட உதவியும் கிடைக்கவில்லை. தற்போது நடைபெற்று வரும்  நிதியறிக்கையில் பனைத் தொழிலா ளர்களின் நலன் காக்கும் வகையில்  பனங்கருப்பட்டிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என  பனைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.