tamilnadu

img

நரிக்குறவர் பள்ளியை அரசு கையகப்படுத்த வேண்டுகோள்

சைதாப்பேட்டை நரிக்குறவர் பள்ளியை அரசு கையகப்படுத்தி, மீண்டும் கல்வி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். பள்ளிக்கு அருகே உள்ள காலி இடத்தில், ஜோதியம்மாள் நகர் மக்கள் பயனடையும் வகையில் சமூக நலக்கூடம், உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று (பிப் 10) சென்னை மாவட்ட துணை ஆட்சியர் கவுசல்யாவிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேசன், கிளைச் செயலாளர் nஜரோம், பொன்னம்பலம் ஆகியோர் மனு அளித்தார். உடன் கட்சியின் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின் உள்ளிட்டோர் உள்ளனர்.