tamilnadu

img

தமிழ்நாடு அமைப்பு தினத்தில் தியாகி சங்கரலிங்கனார் நினைவு மண்டபத்தில் சிபிஎம் உறுதியேற்பு

விருதுநகர், நவ.1- தமிழ்நாடு அமைப்பு தினமான நவம்பர் 1 ஆம் தேதியன்று  தியாகி  சங்கரலிங்கனார் சிலைக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாலை அணிவித்து உறுதிமொழியேற்றனர். மெட்ராஸ் மாகாணம் என்ற  பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டுமென விருதுநகரைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் மேற்கொண்டார். 76 நாட்கள் தொடர்  உண்ணாவிரதம் இருந்து  அவர் உயிரிழந்தார். இந்நிலையில், நவம்பர் 1 இல்  மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப் பட்டது. அதனையொட்டி   நவம்பர் 1  தமிழ்நாடு அமைப்பு தினமாக கடைப் பிடிக்கப்படுகிறது.   தமிழ்நாடு என்ற பெயர் பெற முக்கிய காரணமாய் திகழ்ந்த தியாகி  சங்கரலிங்கனாரை நினைவு கூரும் வகையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் தமிழ்நாடு அமைப்பு தினம் கடைப்பிடிக்கப் பட்டது. விருதுநகர் கல்லூரி சாலையில் உள்ள நினைவு மண்டபத்தில்  அவ ரது சிலைக்கு சிபிஎம் மாவட்டச் செய லாளர் கே.அர்ஜூனன் மாலை அணி வித்து, மரியாதை செலுத்தினார். பின்பு, உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜி.வேலுச் சாமி, ஏ.குருசாமி, எம்.முத்துக்குமார் எல்.முருகன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.பாண்டி, ஆர்.முத்துவேலு,  நகர் செயலாளர் எம். ஜெயபாரத், வடக்கு ஒன்றிய செய லாளர் கே.ராஜேந்திரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.