tamilnadu

img

மேலூர் வட்ட சிஐடியு மற்றும் சிட்டம்பட்டி டோல் பிளாசா தொழிலாளர்கள் நிவாரணம் வழங்கினர்

மதுரை, மே 13- மேலூர் வட்ட பொது தொழிலாளர் சங்கம் சிஐடியு மற்றும் சிட்டம்பட்டி டோல் பிளாசா நிர்வாகம், தொழிலாளர்கள் இணை ந்து திங்களன்று காலை மேலூர் பேருந்து நிலையம் முன்பு மேலூர் பகுதியில் வசிக்கும் ஆதரவற்றோர்.  சுமைப்பணித் தொழிலா ளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், கல் உடைக்கும் தொழிலாளர்கள், சரக்கு வாகன ஓட்டுனர்கள்  150 பேருக்கு  60ஆயிரம் மதிப் புள்ள கொரோனா நிவாரண பொருட்கள் (அரிசி பலசரக்கு பொருட்கள் மற்றும் காய்கறிகள்) வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மேலூர் வட்டப் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலை வர் எஸ்.பி.மணவாளன், பொருளாளர் வி. சேகர், மற்றும் டோல்பிளாசா சங்க நிர்வாகி கள் ஆர்.எம் அக்னிவீரன், டி.முருகன், மற் றும் தினசரி காய்கறி மார்கெட் சங்கத்தின் நிர்வாகிகள் ஏ.சகுபர் அலி, எஸ்.இளங்கோ வன், மலைச்சாமி, ஏ.நேருஜி ஆகியோரும் சிட்டம்பட்டி டோல் பிளாசா நிர்வாகத்தின் பொறுப்பாளர் முதர்சன்  உபேந்தர்ரெட்டி யும் கலந்துகொண்டனர்.