tamilnadu

img

கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்

கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அரசாணை 4டி2 ஆல் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு சார்பில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முன்பு தலைவர் பெருமாள் பிள்ளை தலைமையில் புதனன்று (மார்ச் 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.