tamilnadu

img

இறையூரில் அதிர வைத்த தீண்டாமை

தலித் மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்ற ஆட்சியர்

அய்யனார்கோவிலில் பட்டியல் இன மக்கள் சாமி கும்பிட அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்களை அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கோவிலுக்குள் சென்றார். கோவிலுக்குள் நுழைந்து பட்டியல் இன மக்களை சாமி கும்பிட வைத்தார். மேலும், அங்குள்ள இதர சமூகத்தினரிடமும் பட்டியல் இன மக்கள் கோவிலுக்குள் உள்ளே சென்று சாமி கும்பிட மறுப்பது சட்டப்படி குற்றம் என அறிவுறுத்தினார்.  அப்போது, அங்கு சாமி ஆடுவது போல ஆடி தலித் மக்களை இழிவாகப் பேசிய லெட்சுமணன் மனைவி சிங்கம்மாள் என்பவர் மீது, ‘கோவிலில் தலித் மக்களை நுழைய விடாமல் தடுத்ததாக’ வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

துக்கோட்டை, டிச.27 - புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் தலித் மக்களுக் கான குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த  கொடுமையைத் தொடர்ந்து அங்கே அடுக்கடுக்காக நிகழும் தீண்டாமைக் கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்ட அதிகாரிகள், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், அன்ன வாசல் ஊராட்சி ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சி, இறையூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்திருப்பது திங்கட்கிழமை தெரியவந்தது. இச்சம்பவம் பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மூலமாக வெளிச்சத்திற்கு வரவே, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

எம்.சின்னத்துரை எம்எல்ஏ தலையீடு

சம்பவ இடத்திற்கு அதிகாரிகளு டன் விரைந்து சென்ற கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை, நடந்துள்ள சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அப்பகுதி மக்களுக் கான அடிப்படை வசதிகளை நிறை வேற்றித் தருமாறும் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.  உடனடியாக மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் உள்ள அசுத்த மான தண்ணீரை வெளியேற்றி வேறு குடிநீர் வழங்கப்பட்டது. மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, அப்பகுதி மக்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், நடந்துள்ள சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேரில் ஆய்வு

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளி ட்ட அதிகாரிகள், சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இறையூர் கிரா மத்திற்கு சென்று செவ்வாய்க்கிழமை நேரில்  ஆய்வு செய்தனர்.  மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். “நாங்கள் தலித் மக்கள் என்பதால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். இங்குள்ள அய்யனார் கோவிலில் இதர  சமூகத்தினரைப் போல எங்களை கருவறை  அருகில் சென்று வழிபட அனுமதிப்ப தில்லை. தேநீர் கடைகளில் எங்களுக்கு தனிக் குவளையில்தான் டீ கொடுக்கின்றனர். மயா னத்திற்குச் செல்ல சாலை வசதி இல்லை.  தெருவிளக்குகள் எரிவதில்லை. கட்டப்பட்டு பல ஆண்டுகளான வீடுகளில் வசிக்க முடி யாத அளவுக்கு மிகவும் பழுதடைந்துள்ளன.  எங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள வரத்து வாய்க்கால் தூர்வாரப்படாததால் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மகாத்மா காந்தி தேசிய  வேலை உறுதித்திட்டத்தில் எங்களுக்கு முறையாக வேலை வழங்குவதில்லை” என  அடுக்கடுக்காக குற்றம்சாட்டினர். இந்நிலை யில், தற்பொழுது எங்களுக்கான குடிநீரி லும் மலத்தைக் கலந்துள்ள சம்பவம் எங்  களை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி யுள்ளது என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து பழுதடைந்த வீடு களை விரைந்து செப்பனிடவும், வரத்து வாரிகளை தூர்வாரவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மயான சாலை அமைக்கவும் அதிகாரி களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

தேநீர் கடை உரிமையாளர் கைது

இரட்டைக்குவளை முறை கடைப்பிடிக் கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட தேநீர்  கடையில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவது  தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தேநீர்  கடை உரிமையாளர் மூக்கையா மீது வன்  கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவர் கைது செய்யப்பட்டார்.

பிரச்சனை வரும்போது மட்டும் நடவடிக்கை போதாது: சிபிஎம் கருத்து

இதுகுறித்து கருத்து தெரிவித்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், “புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கொடுமைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதை எங்கள் கட்சியின் சார்பில் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறோம். தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் மூலமாகவும், ஆதாரங்களின் அடிப்படையிலும் நிரூபித்து வருகிறோம். ஆனால், மாவட்ட நிர்வாகமும், காவல்துறை யும் இதுகுறித்து எந்த அக்கறையும் செலுத்து வதில்லை.  பிரச்சனைகள் பெரிதாக வெடிக்கும் போது மட்டும் இதுபோன்ற நடவடிக்கை கள் எடுக்கப்படுகின்றன. அப்படி நடவ டிக்கைகள் எடுக்கப்பட்ட பகுதிகளில் சில  மாதங்கள்கூட அந்த நடவடிக்கை நீடிப்ப தில்லை. மீண்டும் அங்கே தீண்டாமைக் கொடுமைகள் தலைதூக்குகின்றன. எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வா கமும் இதில் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமைகள் எங்கெல்லாம் உள்ளது என தீவிரமாக ஆய்வு மேற் கொண்டு அதன் அடிப்படையில் நட வடிக்கை எடுக்க வேண்டும்.  குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்துள்ள வர்களை விரைவாக கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி யில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்கா ணிக்க வேண்டும். இங்குள்ள பட்டியல் இன  மக்கள் அமைதியாக வாழ உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட  இயக்குநர் நா.கவிதப்பிரியா, இலுப்பூர் வரு வாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.ச.இராம்கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், சி.அன்புமணவாளன், சு.மதியழகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.சலோமி, செயலாளர் சி.ஜீவானந்தம் உள்ளிட்டோரும் பங்கேற்ற னர். இந்த தீண்டாமை கொடுமையை கண்டித்து, டிசம்பர் 30 ஆம் தேதி அன்ன வாசல் ஒன்றியம் காவேரி நகரில் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பங்கேற்கிறார்.        (ந.நி)