tamilnadu

img

இதுவரை அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.3,700 கோடி சொத்துக்கள் மீட்பு

திருநெல்வேலி, நவ. 11- இந்து சமய அறநிலைய துறை சார்பில் நெல்லையப்பர் கோவிலில் ரூ.4.03 கோடி மதிப்பிலான திருப் பணிகள் தொடக்க விழா நெல்லை யப்பர் கோவில் வசந்த மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை நடை பெற்றது.  இதனை இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு  தொடங்கி வைத்தார். பின்னர் புனர மைக்கப்பட இருக்கும் கரு உருமாரி தெப்பத்தையும் ஆய்வு செய்து அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு மலர் தூவி வழிபாடு நடத்தினார்.  நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலை யத்துறை ஆணையாளர் குமர குருபரன் எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், நயினார் நாகேந்தி ரன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு,  முன்னாள் சபாநாயகர் ஆவுடையப் பன், மேயர் சரவணன், துணைமேயர் ராஜு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-  கடந்த ஆட்சியில் திட்டமிடப் படாமல் கட்டப்பட்ட தமிழகத்தில் உள்ள 11 திருமேனி பாதுகாப்பு மையங்களி லும் காவலர்கள் நியமிப்பதில் இருந்த சிக்கலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் திரு மேனி பாதுகாப்பு மையங்கள் செயல்படும். தமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3,700 கோடி அளவிலான சொத்துக் கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளன. 

நெல்லையப்பர் கோவிலில் கடந்த 8 ஆண்டுகளாக பணிகள் நடை பெறாமல் இருந்த அம்பாள் சன்னதி மேற்கு பிரகாரம், கரு உருமாரி தெப்பம் மற்றும் அம்பாள் சன்னதி மேல் கூரை ஓடு அமைக்கும் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டு டி.வி.எஸ். நிறுவ னத்தின் உபயத்தில் பணிகள் தொடங் கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்குள் இந்த பணிகள் நிறைவு பெறும். வரும் ஆண்டில் ரூ.1,000 கோடி செலவில் 1,500 கோவில்க ளில் திருப்பணி செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுக்கு மேலான கோவில்கள் திருப்பணிக்கு ரூ.100 கோடி தமிழக அரசு சார்பில் ஒதுக்கீடு செய்து ரூ.60 கோடிக்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் ரூ.40 கோடிக்கான அரசாணை வெளியிடப்பட்டு மானிய கோரிக்கைக்கு முன்னதாக அனைத்து பணிகளும் நிறைவு பெறும். கன்னி யாகுமரி மாவட்டத்தில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த 100 சிறிய கோவில் கள் சீரமைக்க தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

நகரப் பகுதிகளில் உள்ள 200 கோவிலில் புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வரு கிறது. எந்த காலத்திலும் இல்லாத அளவில் கோவில்கள் குடமுழுக்கு, திருப்பணிகள் மற்றும் ஓடாத தேர் களை ஓட வைப்பதற்கான தேர் திருப் பணிகள் ஆகியவை சிறப்பாக நடத்தப் பட்டு வருகிறது. முழு சுதந்திரத்துடன் அறநிலை யத்துறை செயல்படுவதற்கான சான்றாக இந்த பணிகள் அமைந் துள்ளன. அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் உள்ள வாகனங்கள் சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அற நிலைய துறைக்கு சொந்தமான கல்லூரி கள் தற்காலிகமாக 4 இயங்கி வரும் நிலையில் மீதமுள்ள கல்லூரிக ளுக்கான அனுமதி வழங்குவது தொடர்பான நீதிமன்ற வழக்கு முடிவு பெற்றபின் செயல்பாட்டுக்கு வரும். நெல்லையப்பர் கோவில் தேருக்கு கண்ணாடி தகடு அமைப்பது தொடர் பான மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.  அதற்கான அறிவிப்பு அடுத்த மானிய கோரிக்கையில் வெளியி டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.