tamilnadu

img

குடியுரிமை பெற அரசுக்கு பரிந்துரை செய்க!

மதுரை, அக்.23-  மதுரை மாவட்டம், ஆனையூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கடந்த 33 வருடங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த வெள்ளியன்று மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை நாடாளுமன்ற அலுவலகத்தில்  சந்தித்தனர்.  அப்போது “படித்த தங்களது பிள்ளைகள் வேலை வாய்ப்பின்றி சொற்ப வருமானத்தில் அல்லல்படுகின்றனர். மூன்று தலைமுறை அகதிகளாக அவதிப்படுகிறோம். மருத்துவ படிப்பு கானல் நீராகிப்போனது. அகதி என்ற போர்வையில் வாடும் எங்களுக்கு குடியுரிமை மட்டுமே நிரந்தர தீர்வு. எனவே குடியுரிமை கோரும் எங்களது வேண்டுகோளை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்”  என்று தங்களுடைய கோரிக்கை மனுவை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனிடம் வழங்கினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தெற்கு வாசல் பகுதிக்குழு செயலாளர் போனிபேஸ் மற்றும் முகாம் நபர்கள் உடனிருந்தனர்.