புதுச்சேரி, மார்ச் 19- புதுச்சேரி முதல்வர் ரங்க சாமி வீட்டு முன்பு நியாய விலைக்கடை ஊழியர்கள் குடும் பத்துடன் போராட்டத்தில் ஈடு பட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் 336 நியாயவிலைக் கடைகள் செயல் பட்டன. அதில் 500-க்கும் மேற்பட் டோர் பணிபுரிந்து வந்தனர். இதனி டையே கடந்த சில ஆண்டு களாக ரேசன் கடைகள் மூடப் பட்டுள்ளன. இதையடுத்து, நியாய விலைக் கடைகளை மீண்டும் திறக்கக் கோரியும், நிலுவை ஊதி யத்தை வழங்கக் கோரியும் நியாய விலைக் கடை ஊழியர்கள் தொடர்ந்து பல கட்ட போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று (மார்ச் 19) ரேசன் கடை ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் கதிர்காமத்திலுள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற முடி யாத நிலையுள்ளதாகக் கூறினார். திமுக சட்டப்பேரவை அதற்கு ஊழியர்கள், “2 ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊதியமும் இல்லை” என கூறிய துடன் போராட்டத்தை தொடர்ந் தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் அங்கிருந்து அப்புறப்படு த்தினர். இதனால் கோபமடைந்த ஊழியர்கள் ஜிப்மர் சாலையில் போராட்டத்தை தொடர்ந்தனர். பிறகு, காவல்துறையினர் அனை வரையும் கைது செய்தனர். இந்த தகவலை அறிந்த சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்எல்ஏ செந்தில் குமார் ஆகியோர் காவல் துறை யினருடன் பேச்சுவார்த்தை நடத் தினர். அதன்பின் நியாய விலைக் கடை ஊழியர்கள் குடும் பத்தினருடன் விடுவிக்கப்பட் டனர்.