மழைக்காலத்திற்கு முன்பு மேம்பாலப் பணிகளை முடிக்கவேண்டும் ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவுரை
ராணிப்பேட்டை,ஜூன் 7 – நெமிலி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பகுதிகளில் வெள்ளியன்று (ஜூன் 6) மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திர கலா நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெமிலி ஊராட்சி ஒன்றி யம், ஜாகிர் தண்டலம் ஊராட்சி யில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறமையை ஆய்வு செய்தார். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய குடி யிருப்பு கட்டுமானப் பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -II ன் கீழ் கட்டப்பட்டுவரும் புதிய நியாய விலைக்கடை கட்டுமானப் பணிகள் மற்றும் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் ஆரம்ப நிலையில் உள்ளது. பணிகள் வேகப்படுத்தி விரைவில் முடிக்குமாறு அறிவுறுத்தினார். நெடும்புலி ஊராட்சியில் சிறுணமல்லி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பால கட்டுமானப் பணி களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார். நெல்வாய் ஊராட்சியில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் இருளர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவது பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடிக்க கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வுகளில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை பா. ஜெயசுதா, செயற் பொறியாளர் செந்தில்குமார், மாவட்ட கல்வி அலுவலர் பிரேமலதா (பொறுப்பு), மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயஸ்ரீ, சிவகுமார், உதவி செயற்பொறியாளர் ஜெரால்டு, வட்டாட்சியர் ராஜலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.