சென்னை, நவ. 14- மழையின் போது ஏற்படும் மனித உயிரிழப்புக்கு 4 லட்சம் ரூபாய் நிவார ணம் வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தெரிவித்துள் ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:- வடகிழக்கு பருவமழை தற்போது குறைந்து மீண்டும் மூன்று அல்லது நான்கு நாட்களில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இதற்கிடையில், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பருவமழை காலம் தொடங்கும் முன்பே தயார் நிலையிலிருந்ததால் தற்போது மழை வெள்ள பாதிப்பு தடுக்கப் பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டோருக்காக கடலூர், செங்கல் பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்க ளில் 99 முகாம்கள் திறக்கப்பட்டு 52,751 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது பெய்துள்ள மழையைப் பேரிடராகக் கருதவில்லை.
ஒன்றிய அரசிடம் நிதி கேட்பது தொடர்பாக முதல்வர் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு வந்த பிறகு ஆலோசித்து முடிவெடுக்கப்படும். நிவாரணத் தொகை எவ்வளவு? வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து இருந்தால் ரூ. 4,800 வழங்கப்படும். குடிசை வீடு முழுவதுமாக சேதம் அடைந்திருந்தால் ரூ. 5,000 , குடிசை வீடு பகுதி சேதம் அடைந்திருந்தால் குடிசை ஒன்றிற்கு ரூ. 4,100, கான்கிரீட் கட்டிடம் இடிந்து இருந்தால் ரூ. 95,000 நிவாரணமாக வழங்கப்படும். மழை வெள்ள பாதிப்பால் பசு மாடு எருமை மாடு இறந்திருந்தால் 30 ஆயிரம் ரூபாயும், பன்றி இறந்தி ருந்தால் 3 ஆயிரம் ரூபாயும், எருது ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், கன்று குட்டிக்கு 16 ஆயிரம் ரூபாயும் நிவார ணம் வழங்கப்படும். அதேபோல் மழையின் போது ஏற்படும் மனித உயிர் இழப்புக்கு 4 லட்சம் ரூபாய் நிவார ணம் வழங்கப்படும். இதுவரை தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழக முதல்வர் வெள்ளம் பாதிப்புகளை பார்வையிட்டு வந்த பிறகு அதற்கான நிவாரண தொகை யை வழங்குவதற்கான பணிகளை தொடங்கப்படும். மழைநீர் வடிந்தவுடன் முதலமைச்சருடன் ஆலோசித்துப் பாதி க்கப்பட்ட நெற்பயிருக்கான விலை நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.