சென்னை, அக். 4- ரயில்வே போனஸ் அறிவிப்பு பொது மக்களிடையே போலித் தோற்றத்தை உருவாக்குகிறது என்றும், ஆனால் உண்மை நிலை அதுவல்ல என்று தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனி யன் (டிஆர்இயு) பொதுச் செயலாளர் வி.ஹரிலால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட கங்கள் மூலம் இந்த செய்தி பெரும் பகுதி மக்களை சென்றடைகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பல்லாயிரக் கணக்கான ரூபாயை ரயில்வே ஊழி யர்கள் போனசாக பெறுகிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கி யுள்ளது. (BONUS IS NOTHING BUT DEFERRED WAGES). போனஸ் என்பது கொடுக்கப்படாத சம்பளம். எனவே உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் தான் போனஸ் வழங்க வேண்டும். ஆனால் அப்படி வழங்கப்படுவதில்லை. ரயில்வேயில் குறைந்தபட்ச ஊதி யம் 18,000 ரூபாய். 78 நாள் போனஸ் என்றால் உண்மையிலேயே ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 46,159 ரூபாய் போனசாக பெற்றிருக்க வேண்டும். அதற்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் அதற்கேற்ப கூடுதல் தொகையை போனசாக பெற வேண்டும். ஆனால் அப்படி உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் வழங்கப்படு வதில்லை. ஒரு ஊழியர் எவ்வளவு ஊதியம் வாங்கினாலும், போனசுக் காக கணக்கிடும் போது அவரது ஊதி யம் 7 ஆயிரம் ரூபாயாக கணக்கிடப்படு கிறது. இதைத்தான் போனஸ் உச்ச வரம்பு என்கிறோம். அனைத்து ரயில்வே ஊழியர்களும் பெறும் அதிகபட்ச போனஸ் தொகை 17,951 ரூபாய் ஆகும். கடந்த பத்தாண்டுகளாக இதே தொகையைத் தான் போனசாக பெற்று வருகின்றனர். உயராத போனஸ் நாட்கள் ரயில்வேயில் வழங்கப்படுவது உற்பத்தித் திறனுடன் இணைந்த போனஸ். உற்பத்தி திறன் அதிகரிக்க அதிகரிக்க போனஸ் நாட்கள் அதிகரிக்க வேண்டும். 2010-11ஆம் நிதி யாண்டில் 921 மில்லியன் டன்னாக இருந்த சரக்கு போக்குவரத்து, 2023-24ஆம் நிதியாண்டில் 1,588 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. பயணிகள் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கு 673 கோடி பேர் ரயிலில் பயணம் செய்கின்றனர். ஒட்டுமொத்த ரயில்வே வருவாயில் பெரும் முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக எந்த உயர்வும் இன்றி அதே 78 நாட்கள் போனசாக அறிவிக்கப்படுகிறது. எனவே உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும். போனஸ் கணக்கீட்டு்க் கான உச்சவரம்பை நீக்க வேண்டும். உற்பத்தித் திறனுக்கு ஏற்ப போனஸ் நாட்கள் கணக்கிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.