tamilnadu

img

அதிகாரத்திலிருந்து பாசிச பாஜக அரசை வீழ்த்துவோம்!

சென்னை, மார்ச் 30- ஆட்சி அதிகாரத்திலிருந்து பாசிச பாஜக  அரசை வீழ்த்தும் வரை போராட்டத்தை தொட ருவோம் என்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர். ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்த  ஒன்றிய அரசைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவள வன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதனன்று (மார்ச் 29) ஆர்ப்  பாட்டம் நடைபெற்றது.

கருத்தியல் போர் 

அப்போது தொல்.திருமாவளவன் பேசு கையில், இந்த வழக்குகளை சந்திப்பதற்கு ராகுல் காந்தி தைரியமாக உள்ளார். மன் னிப்புக் கேட்டிருந்தால் தண்டனைக் கிடைத்  திருக்காது என்று தெரிந்தும் மன்னிப்புக் கேட்பதற்கு நான் சாவர்க்கர் இல்லை ராகுல் காந்தி என்று கூறினார். இது பாஜகவுக்கும் காங்கிரசுக்குமான போராட்டம் இல்லை, மோடிக்கும் ராகுல் காந்திக்குமான போராட்டம் இல்லை. இது கருத்தியல் போர். ராகுல் காந்தியை பாஜக எதிர்ப்பது வெறும் தேர்தல் அரசியல் அல்ல, இந்த தேசத்தை மிகப்பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான கருத்தியல் போர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார். “மோடியும் அதானியும் வெறும் நண்பர்கள் இல்லை; மோடியின் பினாமி தான் அதானி. மோடி என்பது சாதி பெயர்  அல்ல. அது ஒரு குடும்பப் பெயர். சட்டத்துறை யை பயன்படுத்தி, நீதித்துறையை பயன் படுத்தி 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி, பதவியை பறிப்பதன் மூலம் ராகுல்  காந்தியை தடுமாற வைக்கலாம் என்று திட்ட மிட்டுள்ளார்கள். ஏனெனில் ராகுல் காந்தி பேச்சு மோடியை மிரள வைக்கிறது” என்றும்  திருமாவளவன் கூறினார்.

ஜி.ராமகிருஷ்ணன் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் பேசுகையில் நீதிமன்றம் ராகுல்  காந்திக்கு 2 ஆண்டு தண்டனை வழங்கி இருந்தாலும், அந்த தீர்ப்பின் மீது ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து, தீர்ப்புக்கு தடை பெறும் போது, அவர் மீண்டும் நாடா ளுமன்ற உறுப்பினராக செயல்படக் கூடிய  வாய்ப்பு உள்ளது. ஆனால் அவசர அவ சரமாக அவருடைய பதவியை மோடி அரசு பறித்துள்ளது என்றார். மான நஷ்ட ஈடு வழக்கு தொடுத்தவரே அந்த வழக்கிற்கு தடை கேட்டு வழக்கு தொடுத்தார். 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம்  அவர் தடை பெறுகிறார். அதன்பிறகு அந்த  வழக்கு கிடப்பில் போடப்பட்டது. ஹிண்டன் பர்க் அறிக்கை வந்தவுடன் தான் மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதானியின் அண்ணன் வினோத் அதானி, தம்பி ராஜேஷ் அதானி. வினோத் அதானிக்கு 38 லெட்டர் பேடு கம்பெனிகள் இருந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது. அதில் பலர் மூலதனம் செய்வார்கள். இவர்களே பங்குச் சந்தையில் மோசடியாக விலையேற்றத்தை உருவாக்கி விற்பனை செய்வார்கள். இப்படிப்பட்ட அதானி மோசடி  குறித்து கேள்வி எழுப்பிய உடன் ராகுலுக்கு  எதிரான வழக்கு  மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஒரே மாதத்தில் தண்டனை வழங்கப்படுகிறது. மான நஷ்ட வழக்கில் இதுவரை எந்த வழக்கிலும் உச்சபட்ச தண்ட னையான 2 ஆண்டுகள் சிறை தண்டனை யை நீதிமன்றம் விதித்தது இல்லை. அபரா தம் விதிக்கப்படும் அவ்வளவுதான். ஆனால்  ராகுல் விஷயத்தில் பதவியை பறிக்க வேண் டும் என்ற நோக்கத்திலேயே 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதானியை பாதுகாப்பதற்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியை சார்ந்தவர்களை சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை மூலம் வழக்கு தொடுத்து பழி வாங்கும் செயலை எதிர்த்து 14 கட்சிகள் ஒன்றி ணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் தற்போ தைய ஒற்றுமை 2024ஆம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தலில் மோடி ஆட்சியை வீழ்த்தும் என்றார். இதில் காங்கிரஸ் அகில இந்திய தேசிய செயலாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், திராவிடர் கழக துணைத் தலை வர் கலி.பூங்குன்றன், சிபிஐஎம்எல் மாநி லச் செயலாளர் ஆசைத்தம்பி, மனித நேய  மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹி ருல்லா, ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் வசீ கரன், மதிமுக கொள்கை பரப்புச் செயலா ளர் வத்தியத்தேவன், திராவிடர் தேசத் தலை வர் கிருஷ்ணாராவ், விழுப்புரம் நாடாளு மன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார், காங்கி ரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா ஆகி யோரும் பேசினர்.