சென்னை,மார்ச் 28- திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்ச னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேர வையில் வேளாண்மை நிதி நிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு செவ்வாயன்று (மார்ச் 28) துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிளித்து பேசி முடித்த தும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் நாகைமாலி பேசுகையில், “தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள திருமண்டங் குடியில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையின் முதலாளி விவசாயிகளின் பெயரில் வங்கியில் கடன் பெற்றுள்ளார். ஆனால், அந்தக் கடன்தொகைக்கும் விவசாயிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இருந்தாலும், அந்த ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் பெயரில் கடன் இருப்பதால், அந்த விவசாயிகள் வேறு எந்தவிதமான உதவிகளை யும் பெற முடியவில்லை. ஆலை முதலாளியும், வங்கி நிர்வாகமும்தான் அந்தக் கடனுக்கு பொறுப் பேற்க வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் வேளாண்மைத்துறை அமைச்சரும் முதலமைச் சரும் தலையீடு செய்து பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும்” என்றார். இதற்கு விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலை யீட்டு பலகட்டமாக பேச்சு வார்த்தை நடத்தியது. அரசும் பல முறை தலையீடும் செய்திருக்கிறது. விரைவில் நல்ல முடிவு எடுப்போம்” என்றார். மார்ச் 25 அன்று நடந்த நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய சிபிஎம் உறுப்பினர் எம். சின்னதுரை, “திருமண்டங்குடி சர்க்கரை ஆலையில் நீண்ட நாட்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் அந்த பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” என்று வலியுறுத் தினார்.