tamilnadu

img

விக்டோரியா கௌரி நியமனத்தால் சிறுபான்மை மக்களுக்கு நீதி கிடைக்குமா?

சேலம், பிப். 7 - சேலத்தில், மருத்துவர் ந.லட்சுமி நரசிம்மன் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மல்லப்பனூர் பிரிவு நங்கவள்ளி மெயின் ரோட்டில் உள்ள டாக்டர் லட்சுமி நரசிம்மன் நினை விடத்தில் செவ்வாயன்று நடை பெற்றது. முன்னதாக, ராஜேந்திரன் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்வின், நினைவு ஜோதியை மருத்துவர்கள் நந்த குமார் பாரதி, டாக்டர் அகிலன், மருத்துவர் சரவணன், கிட்டு, மருத்துவர் அனிதா ஆகியோர் தலைமையில் எடுத்து வந்தனர். இந்த ஜோதியை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து, லட்சுமி நரசிம்மன் நினைவு நாள் ரத்ததான முகாமை திராவிடர் விடு தலைக் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி துவக்கி வைத்தார்.  இதில், சிபிஎம் மாவட்ட செயலா ளர் மேவை சண்முகராஜா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர். வெங்கடபதி பொன்.ரமணி, எம். குணசேகரன், பி.  ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.

இந்நிகழ்வில் பங்கேற்று கே.பால கிருஷ்ணன் பேசுகையில், மருத்துவர் லட்சுமி நரசிம்மன் பாகுபாடு இல்லா மல், மருத்துவர்களின் கோரிக்கை களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டவர். மாணவர் பருவத்தில் இந்திய மாணவர் சங்கத்து டன் இணைந்து பல போராட்டங்களை நடத்திய பின்பு மருத்துவ மாணவ ராக இருந்தபோது தமிழகம் முழு வதும் மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர். போராட்டக் களத்திலேயே  தனது வாழ்நாளை கழித்ததற்கு அவர் ஒரு கம்யூனிஸ்ட் ஆக இருந்ததே காரணம். இருப்பினும் தனது உடலைப் பற்றி அவர் எந்த ஒரு அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை. மக்க ளின் கோரிக்கைகளுக்காக போராடும்  அனைவரும் தனது உடலையும் பேணிக் காப்பது மிகவும் இன்றியமையாத ஒன்று என்றார். முடிவில், அனுராதா  லட்சுமி நரசிம்மன் நன்றி  கூறினார். முன்னதாக மேட்டூர்  மாங்குயில் வசந்தி மற்றும்  கரிசல் கிருஷ்ணசாமி மக்கள் இசை பாடல்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் எண்ணற்றோர் பங்கேற்றனர்.

பேட்டி

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன்,  “பாஜக வின் மகளிர் சங்கத்தின் தலைவராக இருந்துவிட்டு, சிறுபான்மை மக்கள் குறித்து கடுமையாக தறைகுறைவான கருத்துக்களை பேசிய விக்டோரியா கௌரி நீதிபதியானால் எவ்வாறு சிறு பான்மையினர் வழக்குகளை விசா ரிப்பார் என்று தெரியவில்லை. இப்படிப் பட்ட நபரை உயர் நீதிமன்ற  நீதிபதி யாக நியமிப்பது மோசமானசெயல். நீதிமன்றங்கள் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறைய துவங்கிவிடும், இவ்வளவு அவசரமாக அவரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை”என்றார்.  மேலும், அவர் பேசுகையில், நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் அதானி ஊழல் முறை கேடுகள் மற்றும் அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.  இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் இதுபோன்ற தனியார் நிறுவனங்களில் பல ஆயிரம் கோடி முதலீடு போட்டுள்ளன. இதனால் அரசு நிறுவனங்களுக்குத் தான் பாதிப்பு ஏற்படும். ஏழை மக்களுக்குத்தான் சுமை ஏறும். ஆகவே நாடாளுமன்ற குழுவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்றும் கூறினார். “தமிழ்நாட்டில் காலம் தவறி மழை பெய்ததன் காரணமாக டெல்டா  மாவட்டங்களில் சுமார் மூன்று லட்சம் ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் நாசமாகியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் அவசரமாக தலை யிட்டு இரண்டு  அமைச்சர்களை அனுப்பி  வைத்து, அதிகாரிகளைக் கொண்டு குழு அமைத்து ஆய்வு நடத்தியுள்ளார். தாமதம் இன்றி ஆய்வறிக்கையை பெற்று உரிய  இழப்பீடு வழங்க வேண்டும். 33 சதவீதத்திற்கு கீழ் இழப்பு உள்ளவர்களுக்கு இழப் பீடு இல்லை என்பது பெரும் வருத்தத்  திற்குரியது. அவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கே.பால கிருஷ்ணன் கூறினார்.   (ந.நி.)