tamilnadu

img

ஒன்றிய அரசு மீது குற்றப் பத்திரிகை மாற்றுத்திறனாளிகள் தாக்கல்

நாகர்கோவில், டிச. 2- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனா ளிகளை தொடர்ந்து  வஞ்சித்து வரும் ஒன்றிய அரசின் மீது   மக்கள் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டம் தோப்பூர் குமாரபுரத்தில் நடை பெற்றது.   இதில் அறிமுக உரையை சங்கத் தின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சார்லஸ் நிகழ்தினார். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.மரிய ஸ்டீபன் நடுவராக செயல்பட்டார். மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்தார். மாவட்ட தலைவர் கே.முகமது பெரோஸ்கான், மாநி லக்குழு உறுப்பினர் ஆர்.லிட்டில் பிளவர், துணை தலைவர் பேராசிரி யர் த.மனோகர ஜஸ்டஸ், இணை செயலாளர் எஸ்.ஜெயானந்த், துணை தலைவர் எஸ்.அருள் சாட்சியம ளித்தனர். வழக்கை மறுத்து பேராசிரி யர் கே.கணேசன் வாதாடினார். மாவட்டப் பொருளாளர் ஆர்.எஸ். குமார் வரவேற்றார்.அகஸ்தீஸ்வரம் வட்டாரத் தலைவர் ஏ.பவானி நன்றி கூறினார். இதில்  மாற்றுத்திறனாளிகள் உட்பட ஏரளமானோர் பங்கேற்றனர்.