tamilnadu

இணையதளம் மூலம் நெல்கொள்முதல்

மதுரை, செப்.26- விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய  ஏதுவாக, இணையதள வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது பெயர்,  ஆதார் எண், சர்வே எண், வங்கிக்  கணக்கு எண் உள்ளிட்ட விவரங் களை எளிய முறையில் இணை யத்தில் பதிவேற்றம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டிய தேதி யினை முன்பதிவு செய்திட வழி வகை செய்யப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.  WWW.TNCSC-EDPC.IN என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும், இந்த இணை யதளத்திற்குச் சென்று சம்மந்தப்பட்ட விவசாயி தனது செல்போன் எண்ணை பதிவு செய்யவேண்டும். அதைத் தொடர்ந்து செல்போனிற்கு ஒடிபி (OTP) வரும். அந்த எண்ணை பதிவிட்டால் உழவர் பதிவு என்ற திரை தோன்றும். அதில் அனைத்து விவரங் களும் தமிழிலேயே உள்ளன.  அதில் விவசாயிகள் தங்களது அனைத்து விவ ரங்களையும் அதில் பதில் பதிவிட வேண்டும். அதைத் தொடர்ந்து கிடைக் கப்பெறும் தகவல்களைப் பெற்று விவசாயிகள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை கொண்டு செல்லலாம். இறுதித்தேதி செப்.30.

;