புதுக்கோட்டை மாவட்டம் 93.53 சதவீதம் தேர்ச்சி
புதுக்கோட்டை: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் 93.53 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டைவிட, 1.69 சதவீதம் தேர்ச்சி அதிகமாக இருந்தபோதிலும், மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் 23 ஆவது இடத்திலிருந்து 25ஆவது இடத் துக்கு தள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மொத்த பள்ளிகள் 335. இவற்றில் 21,646 பேர் தேர்வெழுதினர். இவர்களில் 10,809 பேர் மாணவர்கள், 10,837 பேர் மாணவி கள். தேர்வு முடிவுகளின்படி 9,898 மாணவர் களும், 10,348 மாணவிகளும் என மொத்தம் 20,246 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.53 சதவீதமாகும். கடந்த 2023-24ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் 91.84 சதவீதத் தேர்ச்சி பெற்று, மாநில அளவிலான தரவரி சைப் பட்டியலில் 23 ஆவது இடத்தில் இருந்தது. தற்போது, 1.69 சதவீதம் கூடுத லாக தேர்ச்சி சதவீதம் எடுத்தும், மாநில தரவரிசைப் பட்டியலில் 25 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 100 சதவீதத் தேர்ச்சி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 335 பள்ளிகளில், 111 பள்ளிகள் நூறு சத வீதத் தேர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் 43 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும். நூற்றுக்கு நூறு... புதுக்கோட்டை மாவட்டத்தில், 366 மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்தி லும், 275 மாணவர்கள் அறிவியல் பாடத்தி லும், 24 மாணவர்கள் கணிதப் பாடத்திலும், 9 மாணவர்கள் ஆங்கிலப் பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்று உள்ளனர். பொன்னமராவதி பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வில், பொன்னமராவதி கேசராபட்டி சிடி இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி, நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. அதிக மதிப்பெண்கள் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் ஆசிரி யர்களையும் பள்ளியின் நிறுவனர் பழ.சிதம்பரம், தாளாளர் அன்னம் சிதம்பரம் ஆகியோர், நேரில் சந்தித்து முத லிடம் பிடித்த மாணவிக்கு ரூ.10,001, 2 ஆம் இடம்பிடித்த மாணவருக்கு ரூ.7,001, 3 ஆம் இடம் பிடித்த மாணவருக்கு ரூ.5,001 வழங்கியதோடு, மேல் படிப்புக்கான கல்விக் கட்டண சலுகையையும் அறிவித்து, வாழ்த்தினர்.
88 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதத்தை எட்டி சாதனை
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் 95.57 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 228 அரசு பள்ளிகள் செயல்பட்டு வரு கின்றன. இதேபோல் 62 அரசு உதவிபெறும் பள்ளிகள், 118 தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 228 அரசு பள்ளிகளில் 5936 மாணவர்கள், 6574 மாணவிகள் என மொத்தம் 12,510 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி னர். இதில் 5,437 மாணவர்களும், 6,340 மாணவிகளும் என 11,777 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.14 ஆகும். கடந்தாண்டு தஞ்சை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 90.87 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 94.14 சதவீத மாணவ-மாணவி கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டை விட 3.27 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. 228 அரசுப் பள்ளிகளில், 88 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளன. பாபநாசம் 10 ஆம் வகுப்பில் பாபநாசம், பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. ஜனனி 483 மதிப்பெண் பெற்று முதலிடமும், பிரதீக் ஷா 477 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடமும், அனுக்ஷா 476 மதிப்பெண் பெற்று 3 ஆம் இடமும் பெற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் செய லர் கலியமூர்த்தி, முதல்வர் தீபக் ஆகியோர் பாராட்டி னர். மெலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி 91 சதவீதம் தேர்ச்சி பெற்றது. ஹிரண்ய குமார் 450 மதிப்பெண் பெற்று முதலி டமும், பிரதீப் 409 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடமும், காவ்யா 407 மதிப்பெண் பெற்று 3 ஆம் இடமும் பெற்றனர். கடந்த வருடம் 77 சதவீத தேர்ச்சியும், அதற்கு முந்தைய வருடம் 56 சதவீத தேர்ச்சியும் பெற்ற இப்பள்ளி, இந்த வருடம் 91 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.