மதுரை:
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர்கோவில் நடை திறக்கப்பட்டு செவ்வாயன்று பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. நடை திறந்த முதல் நாளிலேயே 18ம் படி கருப்பண சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.பக்தர்கள் அனைவரும் சானிடைசர் கொண்டு கையை சுத்தம்செய்து காய்ச்சல், சளி இருமல் உள்ளிட்ட பரிசோதனை செய்தபின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.