tamilnadu

img

பொன்னமராவதி அருகே மக்கள் தொடர்பு முகாம்

பொன்னமராவதி அருகே மக்கள் தொடர்பு முகாம்

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 563 பயனாளிகளுக்கு ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருணா வழங்கினார். பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் அருணா தலைமை வகித்தார். வருவாய்துறை, வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை, பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, மலை பயிர்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 563 பயனாளிகளுக்கு ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி, தனித் துணை ஆட்சியர் ஷோபா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மோகனசுந்தரம், மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர்.