tamilnadu

img

பெரியகுளம் அருகே பொதுமக்கள் மறியல்

தேனி, நவ.9- அடிப்படை வசதி கேட்டு பெரியகுளம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றி யம், கீழவடகரை ஊராட்சியில் அழகர்சாமி புரம் உள்ளது. இங்கு குடிநீர், சாக்கடை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரி வர இல்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் சரி செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது பெய்த மழை யினால் கழிவுநீர் தொடர்ந்து செல்ல முடி யாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதனை சரி செய்யக்கோரி இப்பகுதி மக்கள் பெரியகுளம் வடகரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜ சேகரன், சாக்கடை அடைப்புகளை மண்வெட்டி மூலம் அகற்றி சரி செய்தார். சுகாதாரப்பணியாளர்கள் மூலம் இப்பகுதி முறையாக பராமரிக்கப்படும். அடிப்படை வசதிகள் அனைத்தும் படிப்படியாக செய்து தரப்படும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.