திருநெல்வேலி, ஜூலை 15- நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் பி.கற்பகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.துரை ராஜ் வரவேற்று பேசினார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.கருமலையான், மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் தீக்கதிர் நாளிதழுக்கு 41 ஆண்டு சந்தா, 20 அரையாண்டு சந்தா உட்பட 241 சந்தாக்களுக்கான தொகை ரூ.1 லட்சத்து 39 ஆயிரம், நெல்லை மாவட்டம் சார்பாக முதற்கட்டமாக கட்சியின் மத்தியக் குழு உறுப்பி னர் ஆர்.கருமலையானிடம் வழங்கப்பட்டது. தீக்கதிர் நெல்லை பதிப்பு மேலாளர் பி.என்.இசக்கிமுத்து நன்றி கூறினார்.