tamilnadu

img

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணஙக்ளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா திங்கள்கிழமை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 635 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.12,000 வீதம் ரூ.48,000 மதிப்புடைய மூன்று சக்கர சைக்கிள்களும் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.16,000 மதிப்புடைய மடக்கு சக்கர நாற்காலியும் என 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.64,000 மதிப்புடைய உதவி உபகரணங்கள் ஆட்சியர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், தனித்துணை ஆட்சியர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.