tamilnadu

ஊருக்கு உணவு பொருள் வழங்கும் தொழிலாளிகளுக்கு சம்பளம் தாமதம் ஏன்?

தமிழகம் முழுவதும் 34773 நியாய விலைக் கடைகள், 309 மண்ணெண்ணெய் பங்குகள் உட்பட மொத்தம் 35 ஆயிரத்து 82  கடைகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நியாய விலை கடை ஊழியர்கள் பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள் ,தொ டக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்,  வேளாண் விளைபொருள் விற்பனை சங்க ங்கள் என பல்வேறு நிறுவனங்களில் பணி யாற்றி வருகின்றன .மதுரை மாவட்டத்தில் ஆயிரத்து 389 நியாயவிலைக் கடைகளில் 9 லட்சத்து 11 ஆயிரத்து 459 குடும்ப அட்டைகள் உள்ளன. இவர்களுக்கு அரசு அறிவித்துள்ள அனைத்து பொருட்களும் 98 சதவீத அளவிற்கு வழங்கப்பட்டுள்ளன. கடைகளில் வழங்கப்படும் பொருள்க ளுக்கு தமிழக அரசு விளிம்புத் தொகை  வழங்குவது வழக்கம் .மேலும் நிறுவ னங்கள் திறமைக்கேற்ப கட்டுப்பாடற்ற பொருள்களை விற்பனை செய்து தமது  நிதி தேவையை பூர்த்தி செய்து மாதந்தோ றும் நியாய விலை கடை ஊழியர்கள் சம்பளம் பெற்று வந்தனர்.  

தற்பொழுது கொரோனா காலத்தில் 2020 ஏப்ரல் மே, ஜூன் மாதங்களில் அனைத்து  பொருள்களும் இலவசமாக வழங்கப்படுவ தால் விளிம்புத் தொகை வழங்கப்பட வில்லை. கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்ப னை நடைபெறவில்லை. தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு 2018-19, 2019-20 ஆண்டுகளில் வழங்க வேண்டிய ரூபாய் ஆயிரம் கோடி மானியம்  வழங்கப்படவில்லை. கொரோனாவை பயன்படுத்தி 2021 ஜூன் மாதம் வரை பஞ்சப்படி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக வழங்கி வந்த ஈட்டிய விடுப்பு சலுகை  தடைபட்டுள்ளது. ரேஷன் கடை ஊழி யர்கள் பொதுமக்களை பாதுகாக்கும் வண்ணம் காலை 7.30 மணி முதல் பணி யாற்றி வருகின்றனர். பெரும்பாலான பெண் ஊழியர்கள் காலை உணவை மறந்து பணி யாற்றுகின்ற அவலம் உள்ளது. எனவே அரசின் திட்டங்களை கொண்டு  செல்வதில் முனைப்போடு பணியாற்று கின்ற நியாய விலைக் கடை ஊழியர்க ளுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்குவது  தான் நல்ல அரசின் அடையாளம்.   மாநில  அரசும் உணவுத்துறையும் கூட்டுறவுத்து றையும் நியாயவிலை கடைகளுக்கு வழங்க  வேண்டிய மானியம் ஆயிரம் கோடியை விடுவித்து நியாய விலைக் கடை ஊழி யர்களுக்கு மாதம்தோறும் சம்பளம் வழங்க  வேண்டும்.

இரா. லெனின்  

மாவட்ட பொதுச் செயலாளர்  தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம்