tamilnadu

விபத்தில் உயிரிழந்த பணியாளர், நோய்தொற்று ஏற்பட்ட பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்குக! தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மனு

மதுரை, மே 19- கொரோனா நோய் தொற்று பரவல் காலத்தில் பணியின் போது விபத்தில் உயிரிழந்த பணியாள ருக்கும் மற்றும் நோய்தொற்று ஏற்பட்ட மருத்துவ பணியாளர் களுக்கும் நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் சார் பில் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: மதுரை மருத்துவக்கல்லூரி யில் பணிபுரிந்த எஸ். சவுண்டை யன் (சுகாதார ஆய்வாளர்) கடந்த 6.5.2020 அன்று விபத்தில் சிக்கி 9.5.2020 சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

முதல்வர் அறி விப்பின்படி ரூ.50 லட்சம் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கொரோனா தடுப்புப் பணி யில் இருந்து கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்ட அரசு ஊழி யர்களுக்கு ரூ.2லட்சம் வழங்கப் படும் என்ற முதல்வர் அவர்களின் அறிவிப்பின்படி மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் பணிபுரியும் 3 செவிலியர் உட்பட 6ஊழியர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் பணி புரிய வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவுப்படி ஊழியர்கள் பணி புரிய ஏதுவாக போக்குவரத்து வசதியை அதிகப்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது இக்கோரிக்கைகள் குறித்து உடன் நடவடிக்கை எடுக்கப்படு மென மாவட்ட ஆட்சியர் உறுதி யளித்தார்.

இந்த மனுவினை மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம், மாவட்டத் தலைவர் ஜெ.மூர்த்தி, மாவட்டச் செயலாளர் க.நீதி ராஜா, மாவட்ட இணைச் செயலா ளர் ஜெ.மகேந்திரன் மற்றும் சாலைரவீந்திரன் ஆகியோர் வழங்கினர்.