ஏப். 25இல் சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம்!
தமிழக விரோத மோடி அரசே, ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்!
தமிழகத்தை பல வகைகளிலும் வஞ்சித்து வருவதுடன், உச்ச நீதி மன்றம் கண்டித்தும் ஆர்.என். ரவியை, ஆளுநர் பதவியிலிருந்து நீக்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, ஏப்ரல் 25 அன்று சென்னையில் சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநி லச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அரசியல் சாசனத்தை மதிக்காத ஆளுநர் ரவி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அரசியல் சாசன மாண்புக்கு விரோதமாகவும், தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் நிறை வேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோ தாக்களுக்கு ஒப்புதல் வழங்கா ததை உச்ச நீதிமன்றம் கடுமையா கக் கண்டித்ததுடன் உச்ச நீதிமன்ற மே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித் தது. இந்நிலையில், அரசியல் சாச னத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக மக்களும், ஜனநாயக இயக்கங்க ளும் தொடர்ந்து குரலெழுப்பி வரு கின்றனர். தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் மோடி அரசு அதேபோன்று, ஒன்றிய மோடி அரசு தமிழகத்தையும், தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து வஞ்சி த்து, துரோகமிழைத்து வருகிறது. தமிழகத்திற்கு உரிய வரிப் பங் கீட்டை ஒதுக்க மறுப்பது, கல்விக் கான நிதியை ஒதுக்க மறுப்பது; நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மறுப்பது; 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை நிலுவை வைப்பது; தேசிய கல்விக் கொள் கையைத் திணிப்பது; தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ கத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது; கல்வி, ரயில்வே, சுகாதாரம் உள் ளிட்ட பல திட் டங்களுக்கு தமி ழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய் யாதது போன்ற தமிழக விரோ தப்போக்கைத் தொடர்ந்து கடை பிடித்துவருகிறது. நிதிப் பாக்கியை உடனடியாக வழங்குக! இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை உட னடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்; தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலைத்திட்டத்திற்காக வழங்க வேண்டிய ரூ. 3,796 கோடி பாக்கித் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்; ‘சமக்ரா சிக்க்ஷா அபியான்’ எனப் படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான பள்ளிக்கல்வி நிதி ரூ. 2,152 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்; நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்த மூத்த குடிமக்க ளுக்கான ரயில் கட்டணச் சலு கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; என வலியுறுத்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 25.04.2025 அன்று சென்னையில் சாஸ்திரி பவன் முன்பு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலை மையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். இந்த முற்றுகைப் போராங ட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி மற்றும் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மாவட்டச் செய லாளர்கள் மற்றும் கட்சித் தோழர் கள் திரளாகக் கலந்து கொள்கின் றனர். தமிழகம் மற்றும் மக்கள் நலன் காக்க நடைபெற உள்ள இந்த போ ராட்டத்திற்கு ஜனநாயக இயக்கங்க ளும், பொதுமக்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பி டப்பட்டு உள்ளது.