tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

ஓய்வூதியர்களின் உரிமையை பறிக்கும்  ஒன்றிய அரசின் சட்டத்தை எதிர்த்து ஏப்.4 இல் போராட்டம்

ஓய்வூதியர்களின் ஒட்டு மொத்த உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசின் சட்டத்தை எதிர்த்து நாகர்கோவில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கண்டன தீர்மானம் நிறைவேற்றினர். மார்ச் 29-ம் தேதி அன்று நாகர்கோவில் மாவட்ட பிஎஸ்என்எல் ஒய்வூதியர் சங்கத்தின் மாவட்டசெயற்குழு கூட்டம் வாட்டர் டேங்ரோட்டில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடந்தது. கூட்டத்திற்கு சி.ஆறுமுகம் தலைமை வகித்தார். அகில இந்திய உதவித் தலைவர் எஸ்.மோகன்தாஸ்  துவக்கவுரையாற்றி சங்க பத்திரிகையை வெளியிட்டார். சங்க ஆலோசகர் அ.மீனாட்சிசுந்தரம் பெற்றுக்கொண்டார். மாநில, மாவட்ட கிளைச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . ஓய்வூதியர்களின் உரிமைகளை ஒட்டுமொத்தமாக பறிக்கும் ஒன்றியஅரசின் சட்டத்தினை கண்டித்து  ஏப்ரல் 4-ம் தேதி என்சிசிபிஏ அறைகூவல் விடுத்துள்ள எதிர்ப்பு பேராட்டத்தில் முழுமையாக பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாகர்கோவில் புதிய எரிவாயு தகன  மேடையை மாநகராட்சி மேயர் ஆய்வு

நாகர்கோவில் மாநகராட்சி  புளியடியில் உள்ள எரிவாயு தகன நிலையத்தில் புதிதாக அமைக்கபட்டிருக்கும் எரிவாயு தகன மேடையை  நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், மாநாகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் ஆய்வு செய்து அதற்கான ஆலோசனைகளை மாநகராட்சி அலுவலர்களிடம் கூறினார். மேலும் சாலைகள் அமைத்தல், குப்பைகளை இரண்டு தரமாக பிரிக்கும் பணியையும் பார்வையிட்டு  ஆய்வு நடத்தினார். மேலும் புளியடி பூங்கா போன்றவற்றையும் ஆய்வு செய்தார்.பூங்கா குடியிருப்பு மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். உடன் மாநகர நல அலுவலர் ஆல்பர்  மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா  மண்டல தலைவர் ஜவஹர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டண உயர்வு: வாகனங்களின் கட்டணம் உயரும் அபாயம்

நாகர்கோவில். மார்ச். 31- தமிழ்நாட்டில் உள்ள 40 முக்கிய சுங்கச்சாவடிகளில் (மார்ச் 31) நள்ளிரவுக்குப் பிறகு புதிய சுங்கக் கட்டணங்கள் அமலுக்கு வருகிறது. சுங்கக் கட்டண உயர்வு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையிலான உயர்வாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பொதுமக்கள், சிறிய அளவிலான வியாபாரிகள், வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் கூடுதல் செலவுகளைஎதிர்கொள்ள நேரிடும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து சுங்கக் கட்டணங்களை திருத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய 40 சுங்கச்சாவடிகள் புதிய கட்டணஉயர்வை அமல் படுத்த  உள்ளன. குறிப்பாக, சென்னையைச் சுற்றியுள்ள சுங்கச் சாவடிகள், திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, வேலூர், சேலம், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. கார்கள் மற்றும் லைட் மோட்டார் வாகனங்களுக்கு 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை அதிகரிக்கப் படும்.பேருந்துகள், லாரிகள், மற்றும் கனரக வாகனங்களுக்கு  8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படும். வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.