tamilnadu

img

பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி போராட்டம்

விருதுநகர், நவ.22- 2021-22 ம் ஆண்டில் விவசாயிகள், வெங்காயம், பாசிப்பயறு, நெல், கடலை,  பருத்தி ஆகிய பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை செலுத்தினர். ஆனால், சேதம டைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. எனவே, உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற போதிய நிதி வழங்க வேண்டும். பயிர்களை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை சுட்டு பிடிக்க அனுமதி வழங்க  வேண்டும். விவசாயிகளுக்கு நிறுத்தப்பட்ட  உதவித் தொகை ரூ.6 யிரத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்  வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்  நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். காரியாபட்டியில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு வட்ட செயலாளர் ஏ.குமராண்டி தலைமையேற்றார். துவக்கி வைத்து முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ஏ.அம்மாசி பேசினார். முடிவில் மாவட்ட செயலாளர் வி.முருகன் கண்டன உரையாற்றினார். மேலும் இதில், ஒன்றிய துணைத் தலைவர் ஏ.சதுரகிரி, ஒன்றிய துணைச் செயலாளர் கே.ஆறுமுகம் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர்.