tamilnadu

img

காமராசர் பல்கலை.தொகுப்பூதிய பணியாளர்கள்

மதுரை,ஜூலை 16-  பணிநீக்கம் செய்யப் பட்ட மதுரை காமராசர் பல்கலைக்கழக தொகுப் பூதிய பணியாளர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். மதுரை காமராசர் பல் கலைக்கழகத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பூதியத்தில்  பணி புரிந்து வந்த 136 பணியாளர் கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட அவர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி  90 நாட்களாக தொ டர்ந்து போராடி வருகின்ற னர். இந்நிலையில் ஜூலை  15 வெள்ளியன்று பல்கலைக் கழக நுழைவு வாயில் முன்பாக கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் 136 பணியா ளர்களையும் திடீரென பணி நீக்கம் செய்தனர். மீண்டும் பணி வழங்கக்கோரி  பல் கலைக்கழக நிர்வாகத்திட மும் தமிழக அரசிடமும் பல்வேறு முறை கோரிக்கை முன்வைத்தோம். எந்த வொரு நடவடிக்கையும் இல்லை.

மாற்றுத்திறனாளி பணியாளர் மரணம்

போராட்டத்தில் ஈடுபட்ட வடபழஞ்சி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் கடந்த சில நாட்க ளுக்கு முன் மரணமடைந் ்தார். அதன்பிறகும் அரசு கண்டுகொள்ளாமல் உள் ளது. வழக்கு தொடுத்து வாதாட எங்களுக்கு பண வசதி இல்லை. எனவே சுற்றி யுள்ள கிராமங்களில் இருந்து அரிசி வாங்கி வந்து கஞ்சித்  தொட்டி திறக்கும் போராட் டத்தில் ஈடுபட்டு வருகி றோம்.  பணிநீக்கம் செய்யப் பட்ட 136 பணியாளர் குடும் பங்களின் வாழ்வாதா ரங்களை கருத்தில் கொண்டு  தமிழக அரசு உடனடியாக நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர்  நீதி ராஜா, காமராசர் பல்கலைக்கழக தொகுப் பூதியம்- தற்காலிக பணி யாளர் சங்கத்தின்  தலைவர் வீரபாண்டியன், செயலாளர் நாகரோகிணி மற்றும் நிர்வா கிகள் சின்னகாமன், கார்த்திக், காட்டுராஜா, பால முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.