ஒன்றிய மோடி அரசின் எதேச்சதிகார நடவடிக்கையை கண்டித்தும், சுதந்திரமாக, தன்னிச்சையாக செயல்பட வேண்டிய அமலாக்கத்துறை, வருமானவரித்துறை அமைப்புகளை எதிர்க்கட்சிகளை பழிவாங்க ஏவல் துறையாக பயன்படுத்துவதை கண்டித்தும், கோவையில் சிவானந்த காலனியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் வெள்ளியன்று ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது. டி.ஆர்.பாலு எம்.பி., கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் எம்.பி., கே.எம்.காதர் மொகிதீன், எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ., ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ., வேல்முருகன் எம்எல்ஏ., உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.