வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஏப்.17 தமிழ்நாடு முழுவதும் தர்ணா
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிவிப்பு
மதுரை, ஏப். 7 - இஸ்லாமியர்களைத் துன்புறுத்தும் வகையிலும், இஸ்லாமியர்களுக்கும் பிற மதத்தினருக்கும் உள்ள சகோதரத்து வத்தை சீர்குலைக்கும் வகையிலும் ஒன் றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஏப்ரல் 17 அன்று மாநிலம் தழுவிய தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று பெ. சண் முகம் அறிவித்தார். மதுரையில் ஏப்.6 ஞாயிறு மாலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுப் பொதுக்கூட்டத் திற்கு தலைமையேற்று, கட்சியின் மாநி லச் செயலாளர் பெ. சண்முகம் உரையாற்றி னார். அப்போது அவர் பேசியதாவது:- கடுமையான உழைப்பால் வெற்றிகரமான மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு வர லாற்றுச் சிறப்பு மிக்க மதுரை தமுக்கம் மைதானத்தில் ஏப். 2 முதல் 6-ஆம் தேதி வரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள் ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 800-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்று மாநாட்டில் புதிய மத்தியக்குழுவை- அர சியல் தலைமைக்குழுவை- புதிய பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். தற்பொழுது மதுரையே செங்கடலாக காட்சியளிக்கும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் சங்கமித்து இருக்கிறோம். கட்சியின் அழைப்பை ஏற்று மாநிலத்தின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ள னர். கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக கடுமையான உழைப்பின் மூலமாக இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தி ருக்கிறது. கட்சியினர் முழுமையாக களத் தில் இறங்கி வீடு, வீடாகச் சென்று நிதி திரட்டியதோடு, தங்களது சொந்த நிதியை யும் வழங்கியுள்ளனர். ஆதரவாளர்கள், நண்பர்கள் பல்வேறு தரப்பினரிடத்திலும் நிதி திரட்டியுள்ளனர். பல ஆயிரக்கணக் கான குழந்தைகள் தாங்கள் சேகரித்த உண்டியல் பணத்தையும் மாநாட்டுக்கு நிதி யாக வழங்கி புதிய சரித்திரம் படைத்து இருக்கிறார்கள். நாளையே பழங்குடிகளுக்கு எதிராகவும் சட்டம் வரலாம் நாடாளுமன்றத்தில், முழுக்க முழுக்க அரசியல் சாசனத்துக்கு விரோதமாக- இஸ்லாமியர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் ‘வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. நாளை க்கு கிறிஸ்தவர்களுக்கும், ஆதிவாசி களுக்கும் எதிராகவும் இதுபோன்ற சட்டத் திருத்ததைக் கொண்டு வரமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடை யாது. இந்த சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஏராளமான இஸ்லாமிய மக்களையும் திரட்டி வருகின்ற ஏப்.17 அன்று மாநிலம் முழுவதும் மாபெரும் தர்ணா போராட்டத்தை நடத்தத் திட்ட மிட்டுள்ளோம். வன மக்கள் உரிமை காக்க... ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முத லாவது அரசாங்கத்தில் குறைந்தபட்ட செயல் திட்டத்தின் மூலமாக கொண்டு வரப்பட்டது வன உரிமைச் சட்டம். அந்த சட்டத்தை பல்வேறு மாநிலங்கள் உரிய முறையில் அமல்படுத்தவில்லை. இந்நிலையில், சுற்றுச்சூழல், பல்லு யிர்ப் பாதுகாப்பு, வன விலங்கு பாது காப்பு என்ற போர்வையில் சட்டத்தையே நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு இறங்கி உள்ளது. இந்நிலை யில், வன உரிமைச் சட்டத்தைப் பாதுகாக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. விவசாயிகள் - தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஆட்சியாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஒன்றிய அரசால் தற் பொழுது குற்றுயிரும், குறையுயிருமாக சிதைக்கப்பட்டுள்ளது. விவசாயத் தொழி லாளர்களுக்கான நிதியைக் குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது மட்டுமல்லாமல், இத்திட் டத்திற்கு எதிரான வலுவான பிரச்சா ரத்தையும் ஆட்சியாளர்கள் செய்து கொண்டு இருக்கின்றனர். இத்திட்டத்தை பாதுகாக்கவும், நிதியை அதிகப்படுத்த வும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மாநாட்டுத் தீர்மானங்களை வலுவான பிரச்சாரங்கள் மூலம் நாடு முழுவதும் கொண்டு செல்லவும், போராட்டங்களை முன்னெடுக்கவும் மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. அதை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம். இவ்வாறு பெ.சண்முகம் பேசினார்.