பேராசிரியர் பெ.விஜய குமார் தமது கல்விப் பணியின் போது மட்டு மின்றி பின்னரும் ஆழ்ந்த, பரந்த வாசிப்பாளராக இருந்த தை உணர்த்தும் வகையிலான படைப்பு தான் ‘நாவல் இலக்கிய உலகில் ஓர் உலா’ இது அவரது மூன்றாவது நூலாகும். ஏற்கெ னவே ‘தமிழ்ச் சிறுகதைச் சிற்பி கள், சிறுகதை இலக்கியத்தின் சிகரங்கள்’ நூல்கள் வெளி வந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.
இந்தத் தொகுப்பில் 16 நாவ லாசிரியர்களின் நாவல்கள் பற்றியும் அவர்களைப் பற்றியும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் பேரா. விஜயகுமார். ஆனால் அவை வெறும் அறிமுகமாக இல்லாமல் ஆய்வுக் கண் ணோட்டமும் கொண்டாதாக உள்ளது இதன் சிறப்பு அம்ச மாகும். இந்த 16 நாவல்களும் வெவ்வேறு வகையிலான பின்பு லங்களையும் கதைச் சூழல் களையும் கொண்டுள்ளன. அவ ரது இத்தகைய தேர்வுக்கு அடிப்படையாக அமைந்தி ருப்பது இலக்கிய தாகம். விடுதலைப் போராட்டக் காலப் பின்னணி முதல் நடப்புக்கால நிகழ்வுகள் வரை யும் தமிழகம் மட்டுமின்றி வங்காளம், கேரளம், இலங்கை என பல பகுதிகள் வரையும் அவர் நமக்கு அறிமுகம் செய்திருக் கும் நாவல்கள் வெவ்வேறு பரி மாணங்களைக் காட்டுகின்றன. சமகாலப் பிரச்சனைகளான சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, அக திகள் குடியுரிமை, தலித் மற்றும் பழங்குடி மக்களின் குரல்கள், முற்போக்குச் சிந்தனைகள் எனப் பலவகையான பொருண் மைகளில் இந்த நாவல்கள் அமைந்து வாசகர்களை ஈர்க்கின்றன.
முதல் நாவலான ‘உப்பு வேலி’ (ராய் மாக்ஸம்) உண்மை யிலே நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. ‘உம்மத்’ (ஸர்மிளா ஸெய்யத்) இலங்கையின் சம கால வாழ்வியல் எத்தனை சிக்கல்களுடன் உள்ளது என்ப தையும் பொதுச் சேவையில் ஈடுபடும் முஸ்லிம் பெண் எத்த கைய சிரமங்களுக்கு உள்ளா கிறார் என்பதும் நம்மை உருக வைக்கிறது. இந்த 16 பேரில் ஐவர் பெண்கள் என்பதும், மூவர் சிறுபான்மை சமூகத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழின் மிகச்சிறந்த எழுத் தாளர்களான தொ.மு.சி. ரகு நாதன், ஹெப் சிபா, டி.செல்வ ராஜ், ராஜம் கிருஷ்ணன், இமையம், பூமணி, பால முருகன், சல்மா உள்ளிட்டோ ரும் வைக்கம் முகம்மது பஷீர், தேபேஷ் ராய் போன்றோரும் இந்த நூலில் இடம்பெற்றுள்ள னர். ஐஏஎஸ் அதிகாரி மு.ராஜேந் திரன் (காலாபாணி), பேரா சிரியை எம்.ஏ.சுசீலா(அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்) போன்றவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். முத்துநாகு (சுளுந்தீ), நக்கீரன் (காடோடி) ஆகியோரின் நாவல்கள் மிகுந்த கவனத்துக் குரியவையாகும். மொத்தத்தில் இந்த நூல் அறிமுகப்படுத்தும் நாவல்களை முழுவதுமாகப் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் நமக்கு மேலிடுவதே ஆசிரியரின் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.
நாவல் இலக்கிய உலகில் ஓர் உலா
ஆசிரியர்:
பேரா. பெ.விஜயகுமார்
வெளியீடு:
பட்டறிவுப் பதிப்பகம்
விலை: 120/