tamilnadu

img

வண்ணங்களின் தினம்..! -- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

ஆதி நிறங்கள் ஏழு. அதில் பிறந்த நிறங்கள் பல நூறு. வண்ணங் களைப் பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. வெள்ளை தொடங்கி கறுப்பு வரை ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு வருக்குப் பிடிக்கும். எல்லோரும் ஒரே வண்ண  ஆடை அணிந்தால் அதனால் ஏற்படும் மகிழ்ச்சி யே அலாதியானது. மாணவர்கள் தினமும் பள்ளிக்கு சீருடை அணிந்து மகிழ்ச்சியாக வந்தாலும் வண்ண ஆடை அணிய அனுமதி கொடுத்தால் மிகவும் மகிழ்வார்கள். அதிலும் அனைவரும் ஒரே வண்ண ஆடை அணிந்து வந்தால் அன்று திரு விழா மகிழ்ச்சிதான். அந்த மகிழ்ச்சியை மாண வர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் எங்கள் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் “வண்ணங்களின் தினம்”  கொண்டாடி வருகின்றோம். ஆம் சனிக்கிழமை களில் பள்ளி வேலை நாள் என்றால் ஒரே வண்ண ஆடைகளை அணிந்து வருவார்கள். அன்றைய நாளில் பரிசு, தின்பண்டம் எல்லாம் அதே வண்ணத்திலேயே வழங்கப்படும்.

மஞ்சள் தினம்..!

மஞ்சள் மங்களகரமானது என்பார்கள். அந்தக் கருத்தின் அடிப்படையில் முதல்  வண்ண தினமாக மஞ்சள் தினம் கொண்டாடி னோம். மாணவர்கள் மகிழ்வாய் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து வந்தனர். அவர்கள் அனைவருக்கும் மஞ்சள் நிற சாமந்திப்பூ கொடுத்து வரவேற்றோம். மஞ்சள் நிற இனிப்பு வழங்கப்பட்டது. சுவைத்து மகிழ்ந்தனர்.

பச்சை தினம்..!

வளமையைக் குறிக்கும் விதமாக பச்சை தினம் அனுசரிக்கப்பட்டது. மாணவர்கள் பச்சை,  இளம்பச்சை நிறங்களில் ஆடைகளை அணிந்து  வந்தனர். அவர்களை பச்சை வண்ண பலூன் களைக் கொடுத்து வரவேற்றோம். பச்சை வண்ண தின்பண்டமாக கொய்யாக்காய் வழங்கி னோம். சுவைத்து மகிழ்ந்தனர்.

ரோஸ் தினம்..!

ரோஜாப்பூ எல்லோருக்கும் பிடிக்கும். அதனைப் போலவே ரோஸ் வண்ணமும் பிடிக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் அனைவரும் ஆர்வத்தோடு ரோஸ்  வண்ண ஆடைகளை அணிந்து வந்தனர். அவர்களுக்கு ரோஸ் வண்ணத் தாளில் செய்யப்பட்ட பூக்கள் வழங்கப்பட்டன. மாண வர்கள் அதனைதங்கள் ஆடைகளில் அணிந்து கொண்டனர். தின்பண்டமாக ரோஸ் வண்ண டிராகன் புரூட் வழங்கப்பட்டது. ஆங்கில வழிப் பள்ளிகளில் மட்டுமே இப்படி யான தினங்கள் கொண்டாடப் படுகின்றன. அவைகளை நாமும் நமது அரசுப் பள்ளிகளில் கொண்டாடும் போது மாணவர்கள் சலிக்காது சனிக்கிழமையானாலும் விரும்பி பள்ளி வருகின்றனர். இப்படிப்பட்ட தினங்களை கொண்டாடுவோம். மாணவர்கள் திருவிழா போல் தினமும் பள்ளிக்கு தவறாது மகிழ்ச்சியோடு வருவார்கள் என்பது உறுதி.