tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

பெரும் முதலைகளை பிடிக்கவே பண மதிப்பு நீக்க நடவடிக்கை என பிரதமர் சொன்னார். ஒரு குளத்தில் உள்ள நீரையெல்லாம் அப்புறப்படுத்தி விட்டால் முதலைகளைப் பிடித்து விடலாம் எனும் யோசனையை போன்றது தான் இதுவும். பண மதிப்பு நீக்கம் எனும் நடவடிக்கையாக நீரையெல்லாம் அப்புறப்படுத்தி விட்டு பார்த்த போது முதலைகளெல்லாம் தப்பித்து சென்று விட்டன. ஏனெனில் முதலைகள் நீரில் மட்டுமல்ல, நிலத்திலும் வாழ்பவை யாகும். ஆனால் நீரை அப்புறப்படுத்தியதால் செத்து மிதந்தவையெல்லாம் சின்னச் சின்ன மீன்கள் தான். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் மீன்களைப் போன்ற அப்பாவி மக்கள் தான்.