சிபிஎம் வலியுறுத்தல்
நாகர்கோவில், ஜூலை 24- கொரோனா தொற்று முடிவுக்கு வரும் வரை அனைத்து குறுசிறு நிதி நிறுவனங்கள் கடன் வசூலில் ஈடுபட்டு மக்களை சித்ரவதை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் நிதி நிறுவனங்கள் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி வருகின்றன. இந்த குழுக்களில் இருந்து பெண்கள் கடன் பெற்று சுயமாக தொழில் செய்து வரு கின்றனர். கொரோனா ஊரடங்கால் இந்த குழுக்களின் உறுப்பினர்கள் கடந்த பல மாதங்களாக தொழில் ஏதும் செய்ய இயலாமல் வருமானம் ஏதும் இன்றி தவிக்கிறார்கள். ஆதலால் மேற் சொன்ன குழுக்களின் உறுப்பினர்க ளால் தவணை தொகையை செலுத்த முடியவில்லை.
தவணை செலுத்தாத காரணத்தினால் பல நிதி நிறுவன நிர்வாகிகள் சுயஉதவிக்குழு உறுப்பி னர்களை கைபேசி மூலமாகவும், நேரிலும் வந்து மிக மோசமாகவும் ஆபாசமாகவும் பேசியும் மிரட்டியும் வருகிறார்கள். இதனால் சுயஉதவி குழு பெண் உறுப்பினர்கள் கௌரவமாகவும், பயமின்றியும் அமைதியாகவும் வாழ வழியின்றி இன்னலில் வாழும் நிலை யில் உள்ளனர். இவ்வாறு மாவட்டம் முழுவதும் குழு கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்த இயலாத சூழலில் உள்ளனர். எனவே ஆட்சியர் இந்த குழுக்களின் உறுப்பினர்கள் கட்ட வேண்டிய தவணை தொகையை கட்டுவதற்கு கொரோனா தொற்று முடிவுக்கு வரும் வரை சம்பந்தப்பட்ட அனைத்து குறுசிறு நிதி நிறுவனங்கள் கடன் வசூலில் ஈடுபட்டு மக்களை சித்ரவதை செய்வதிலிருந்து பாதுகாப்பு நல்கி உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அகமது உசேன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, வட்டார செயலாளர் மோகன், அரு ணாச்சலம், ராம லட்சுமி, அமலா உட்பட பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.