tamilnadu

பொன்முடி, செந்தில்பாலாஜி விடுவிப்பு மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சரானார்

பொன்முடி, செந்தில்பாலாஜி விடுவிப்பு மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சரானார்

தமிழக அமைச்சரவையில் மாற்றம்

ன்னை, ஏப்.27- தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த  ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவையில் 6வது முறையாக மாற்றம்  செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் இருந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விடு விக்கப்பட்டுள்ளார். அதன்படி, சில அமைச்சர்களின் பதவிகள் மாற்றப்பட்டு பதவியில் இருக்கும் அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீனா? அமைச்சர் பதவியா ? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், செந்தில் பாலாஜி  அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளார். இதேபோல், வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளார். சைவம், வைணவம் என குறிப்பிட்டு பெண்களை இழிவாக பேசியதால் பொன்முடிக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அமைச்சரவையில் இருந்து விடு விக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு, செந்தில்  பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துச்சாமிக்கு மது விலக்கு  மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொன்முடி  வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கூடுதலாக கைத்தறித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர வையில் மனோ தங்கராஜ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். மனோ தங்கராஜூக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகா குறித்து அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி,  பொன்முடியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.