எம். சின்னத்துரை எம்எல்ஏ சட்டமன்றத்தில் பேச்சு
சென்னை, ஜூன் 29- தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக் கிழமை காவல் மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் எம். சின்னத்துரை எம்எல்ஏ பங்கேற்றுப் பேசியது வருமாறு: ஹைட்ரோ கார்பன் போராட்ட வழக்குகளை திரும்பப் பெறுக! கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின் போது மக்கள் தன்னெழுச்சியாக பல்வேறு போராட் டங்களை முன்னெடுத்த போது அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் அரசு வாபஸ் பெற்றது வரவேற்கத்தக்கது. அதேசமயம், புதுக்கோட்டை மாவட்டத் தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய தொழிற்சங்க இயக்கங் கள், வாலிபர், மாணவர், மாதர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் மீது போடப்பட்ட பெரும்பா லான வழக்குகள் இன்று வரை திரும்பப் பெறப்படவில்லை. இவை அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சீரணி அரங்கத்தைத் திறக்க வேண்டும்!
அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங் கள், தொழிற்சங்கங்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் போது காவல்துறை அனுமதி பெறுவதில் பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதால் பெரும் சிரமங்க ளை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் பாரம்பரியமாக போராட்டம் நடத்தப்படும் சீரணி அரங்கம் மூடப்பட்டது. இதை மீண்டும் திறந்து பொதுக் கூட்டங்கள், பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும். தற்போது சேப்பாக்கம் அரசினர் விடுதி, சென்ட்ரல் மெமோரியல் ஹால் போன்ற இடங்க ளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. எனவே, சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள், தொழிற்சங்க அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டுகிறேன்.
லாக் - அப் மரணங்கள்
லாக்-அப் மரணங்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு அனைத்துக் காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்துவ தையும், அவை செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டுகிறேன். போதைப் பொருள் விற்பனை கும்பல் மீது நடவடிக்கை கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்ப னையைத் தடுப்பதற்கு தீவிரமான நடவடிக்கை களை முடுக்கி விட வேண்டும். சமூகத்தைச் சீரழிக்கும் இக்கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் ஒரு கும்பல் மூன்றாண்டுகளாக ஏழை - எளிய பள்ளி மாணவிகளை பாலியல் வணிகத்தில் ஈடுப டுத்திய சம்பவம் நெஞ்சத்தை பதற வைக்கிறது. இச்சம்பவத்தில் எத்தனை மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவில்லை. எனவே, இச்சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு விசாரித்து மூன்று மாத கால அவகாசத்தில் குற்றவாளிகள் அனை வரையும் கைது செய்திட வேண்டும்.
சிபிசிஐடி விசாரணை: முதல்வர் உறுதியளிப்பு!
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தேனாம்பேட்டை சம்பவத்தில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப் பட்டுள்ளனர். நான்கு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இருந்தாலும் உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று சிபிசிஐடி விசாரணைக்கு நிச்சயம் பரிந்துரைக்கப்படும்” என்றார். எஸ்சி- எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துக தொடர்ந்து பேசிய எம். சின்னதுரை எம்எல்ஏ, “பெண்கள் - குழந்தைகள் மீதான பாலி யல் வன்முறைகளை தடுப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும். பட்டியலின மக்கள் மீதான வன் முறைகள், தாக்குதல்கள் மீது எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்ப தை உறுதி செய்ய வேண்டும். சிசிடிவி கேமரா தேவை! பெருகி வரும் குற்றங்களைத் தடுப்பதற்கு மாநகரம், நகரம், பேரூர், சிற்றூர்களில் முக்கிய மான மையங்களில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
விசாகா கமிட்டி
பெண் காவலர்கள் பணிபுரியும் காவல் நிலை யங்கள், காவல் அலுவலகங்களில் விசாகா கமிட்டி கட்டாயம் அமைக்க வேண்டும். பெண் காவலர்களுக்கு பணியிட மாறுதல், பதவி உயர்வு, குடியிருப்பு ஒதுக்கீடு இவற்றில் முன்னுரிமை அளிக்க வேண்டும். சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித் துள்ளன. போலி இணைய தளங்களை கண்ட றிந்து முடக்கிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மக்களிடம் உரிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். காவலர் - காவல் நிலையங்கள் எண்ணிக்கையை அதிகரித்திடுக! காவல்துறையில் போதுமான காவலர் பணியிடங்கள் நிரப்பப்படாதது, குற்றங்கள் அதி களவு நடப்பதற்கு ஒரு காரணமாக உள்ளது. எனவே, காலிப் பணியிடங்களை நிரப்புவ தோடு, மக்கள் தொகைக்கேற்ப கூடுதலாக காவல் நிலையங்களை அமைக்கவும், அதற்கேற்ப காவலர்களை கூடுதலாக நியமிக்கவும் நடவ டிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
போலீசாருக்கு சங்கம் வைக்கும் உரிமையை வழங்குக!
காவலர்களுக்கு வாரம் ஒரு முறை விடு முறை அளிக்க அரசாணை வெளியிடப்பட்டும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. கூடுதல் பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யும் அளவிற்கு சென்று விடு கிறார்கள். அதோடு விரும்பத்தகாத நிகழ்வுக ளும் நடக்கின்றன. எனவே, காவலர்களுக்கு வார விடுமுறை, 8 மணி நேரம் வேலை, பணியிட மாறுதல், சங்கம் வைக்கும் உரிமை போன்ற வைகள் வழங்க வேண்டும். காவல்துறையில் வேலைவாய்ப்பு அலுவல கங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அவர்களுக்கு மிகக் குறை ந்த அளவிலேயே ரூ. 3000, 4000 என ஊதி யம் வழங்கப்படுகிறது. மாநில டிஜிபி அலுவல கத்திலும் இதே நிலை தான் நீடிக்கிறது என்று தெரிகிறது. இவர்களுக்கான ஊதியத்தை உட னடியாக உயர்த்திடவும், பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக!
காவல்துறையில் 2002-ஆம் ஆண்டில் தேர்வாகி அப்பாய்ண்ட்மெண்ட் செய்து, 2003-ஆம் ஆண்டு டிசம்பரில் பணிக்கு சென்ற காவலர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாக்கப்படவில்லை. இதனால் 8 ஆயிரத்து 500 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதுசம்பந்த மாக வழக்கு நடப்பதாகவும் தெரிகிறது. அரசு பரிசீலித்து இவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கேட்டுக் கொள்கிறேன். காவலர்கள் - குற்றவாளிகளை நீதிமன்றத் திற்கு அழைத்துச் செல்லும் போது அரசு மிக குறைந்த அளவிலேயே உணவுப் படி வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அரசு பரிசீலித்து இதனை உயர்த்தி தர வேண்டும். சுற்றுலா, ஆன்மீக தலங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்துக! சுற்றுலா தலங்கள், ஆன்மீக தலங்கள், கடற்கரை போன்ற பகுதிகளில் புறக்காவல் நிலையங்களைக் கூடுதலாக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள காவல் நிலையங்களில் நீடித்து வரும் காவலர் பற்றாக்குறையை போக்க வேண்டும். தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களைப் பூர்த்தி செய்திட வேண்டும். தீயணைப்பு போலீசாருக்கான குடியிருப்பு களையும் கூடுதலாக்கிட வேண்டும். எனது கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் கந்தர்வக்கோட்டைக்கு ஒரு டிஎஸ்பி அலுவலகம், மகளிர் காவல் நிலை யம், கூடுதல் காவல் நிலையங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும். அதேபோல் கந்தர்வக் கோட்டையில் தீயணைப்பு அலுவலகம் ஒன்றும் கட்டிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு எம்.சின்னத்துரை எம்எல்ஏ பேசினார்.