சென்னை, மார்ச் 29- தமிழ்நாட்டில் ஒருபுறம் ஆலைகள் அதிகரிப்பதும் மறுபுறம் வேலைவாய்ப்புகள் சுருங்குவதும் அதிகரித்துள்ளதால் நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை கணி சமாக குறைந்து வருகிறது என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.சின்னதுரை தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று (மார்ச் 29) தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.சின்னதுரை பேசியதா வது:- ஒன்றிய பாஜக அரசு தொழிலாளர் களின் நலனைப் பறிக்கும் வகையில் தொழிலாளர்களுக்கு விரோதமாக நிறைவேற்றியுள்ள 4 சட்டத் தொகுப்பு களை தமிழ்நாட்டில் அமலாக்கக் கூடாது. தொழில் நல வாரியங்களுக்கு முத்தரப்புக்குழுக்களை அமைத்து, 17 தொழில் வாரியான நல வாரியங் களுக்கு தொழிற்சங்கங்கள் பரிந்துரை செய்த பிரதிநிதிகளை உடனே நியமனம் செய்ய வேண்டும். 18 வகை யான நலவாரியங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை அறிவித்திட வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்க ளுக்கான சட்டத்தை (1979-ஐ) கறாராக நிறைவேற்றிட வேண்டும். தொழில் நிறுவனங்கள் அரசு அதிகாரிகளிடம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விபரங்களை பதிவு செய்து அவர்க ளுக்கான ஊதியம், சமூக பாது காப்பை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஒருபுறம் ஆலை கள் அதிகரிப்பதும், மறுபுறம் வேலை வாய்புகள் சுருங்குவதும் அதிகரித் துள்ளது. நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைகிறது. நிரந்தர மில்லாத தொழிலாளர்கள் எண்ணிக்கை உயருகிறது. தொழி லாளர்கள் கண்ணியமாக வாழக்கூடிய வகையில் ஊதியம் மற்றும் சட்டப் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ. 26,000 என நிர்ண யிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் எவ்வித பணி மற்றும் சட்ட பாதுகாப்பு இல்லாமல் அவுட்சோர்சிங் மூலம் தினக்கூலிகளாக தொழிலாளர் கள் பணிபுரிவது சமூக நீதிக்குவிரோ தமானதாகும். அடுத்த தலைமுறை தொழிலாளர்களும் கடுமையாக பாதிக் கப்படுவார்கள். அவுட்சோர்சிங்காக போடப்பட்ட அரசாணைகள் 152, 139, 115 ஆகியவை நீக்கம் செய்து, தொழிலாளர் விரோதப் போக்கை நமது அரசு செய்திடாது என்ற நம்பிக் கையை ஏற்படுத்த வேண்டும்.
கூலிக்கான போராட்டமல்ல...
தமிழ்நாட்டில் நடைபெறுவது கூலிக்கான போராட்டம் மட்டுமல்ல. சங்கம் சேரும் உரிமை, கூட்டுப் பேர உரிமை, தொழிற்சங்க உரிமைக்கான தாகும். சங்கம் அமைக்கப்படுவதற்கு முதலாளிகள் மறுப்பதும், ஏற்கனவே அமைக்கப்பட்ட சங்கத்தை ஏற்க மறுப் பதும், தொழிலாளர்கள் பழிவாங்கப் படுவதும், பணிமாற்றம், நீக்கம் செய் யப்படுவற்கு எதிரான போராட்டங்களே கூடுதலாக நடந்து வருகின்றன. குறிப்பாக, யமஹா, என்.எஸ்.கே பேரிங்க்ஸ், மென்டார் பிரிண்டிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர் துறை அதிகாரிகளின் அறிவுரைகளை மதிப் பதில்லை. அரசு தொழிற்சங்க அங்கீ காரச் சட்டத்தை இயற்றி தொழிலா ளர்களை பாதுகாக்க வேண்டும்.
பணியாளர்களின் அர்ப்பணிப்பு
அங்கன்வாடி, சத்துணவு, ஆஷா, மக்களைத் தேடி மருத்துவம் போன்ற வற்றில் பணிபுரியும் பெண் தொழி லாளர்கள் மனித வளக் குறியீட்டை மேம்படுத்தும் பணியில் அர்ப்பணிப் புடன் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். இ-சேவை மையத்தில் பணி யாற்றும் ஊழியர்களின் வேலையைப் பறிக்கக் கூடாது. டாஸ்மாக் ஊழியர் களை பணிநிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
போக்குவரத்து, மின் ஊழியர்கள்
அரசுப் போக்குவரத்துக் கழகங் களை பாதுகாக்கவும், பொதுபோக் குவரத்தை பலப்படுத்தவும் அரசு முனைப்பு காட்டிட வேண்டும். சென்னை மாநகரில் தனியார் மூலம் பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும். மின்வாரிய ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் வழங்கப்படா மல் உள்ள ஊதிய உயர்வை பேச்சு வார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காண வேண்டும். ஒப்பந்த முறையில் பணி யாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து துறைக ளிலும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
சட்டப் பாதுகாப்பு இல்லை
ஸ்விகி, சொமோட்டோ, ஓலா, உபர் உள்ளிட்ட பல்வேறு பெயர்க ளில் இயங்கும் ஜிக் ஊழியர்களின் பாது காப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு மீட்டர் கட்டணம் மாற்றியமைக்க வேண்டும். அரசு செயலியை உருவாக்க வேண்டும். தேசிய வங்கிகளில் ஆட்டோ வாங்குவதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்.
இஎஸ்ஐ மருத்துவமனைகள் தேவை
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திரு வள்ளூர் உள்ளிட்ட தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் இ.எஸ்.ஐ. மருத்து வமனைகள் அமைத்து தொழிலா ளர்களின் சுகாதார உத்தரவாதத்தை கண்காணிக்க வேண்டும்.
மீனவர் நலன்
புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மீனவர்கள் இலங்கை கடற்படை யினரால் தாக்கப்படுவது, படகுகள் அபகரிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. இவை தடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு மீனவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும். பீடித் தொழிலாளர்களுக்கான வீடு, படிப்பு உதவித் தொகை மற்றும் மருத்துவச் செலவினங்களுக்கு, செஸ் வரி விதிப்பு மூலம் பெறப்பட்ட நிதியினை பயன்படுத்த வேண்டும். உழைக்கும் பெண்களுக்கு சலுகை கட்டணத்திலான தங்கும் விடுதிகள் சிப்காட் பகுதியில் கட்டி திறக்கப்பட்டுள்ளது. இரவு நேர பாது காப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதுபோல் இளம் ஆண் தொழிலா ளர்களுக்கும் தங்கும் விடுதிகள் தனியாக கட்டித் தர வேண்டும். பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும். மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும். மருந்து விற்பனை பிரதிநிதி களுக்கு 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்தி குறைந்தபட்ச கூலி வழங்கிடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். சுமைப் பணி தொழிலாளர்கள் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்க ளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்க ளுக்கு கூலியை உயர்த்த வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படி உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.
நீர் வளத்துறை
மாநிலம் முழுவதும் பாசன ஏரிகள், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி, பாசனப் பரப்பை விஸ்தரிக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டு கிறேன். காவிரி - வைகை - குண்டாறு - வைப்பாறு இணைப்பு திட்டத்தை விரைந்து முடிக்க வேண் டும். கந்தர்வக்கோட்டை தொகு திக்கு புதிதாக ஒரு கிளை ஆறு உரு வாக்கினால் 75 பொதுப்பணித்துறை கண்மாய்க்கு நீர்ப்பாய்ந்து பல ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளும், குடும்பங்களும் பயனடைவார்கள். காவிரியில் கல்லணைக் கால்வாய் சீரமைப்பு பணிகளை கண்காணிப் பதற்கு தனியாக உயரதிகாரிகள் நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.