tamilnadu

பிளஸ்-2 தேர்ச்சி விகிதம்: நாகை மாவட்டம் முன்னிலை

பிளஸ்-2 தேர்ச்சி விகிதம்: நாகை மாவட்டம் முன்னிலை

நாகப்பட்டினம், மே 11-  நாகப்பட்டினம் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 6494 மாணவ - மாணவி யர்கள் கடந்த மார்ச் மாதம் எழுதி இருந்தனர்.  பொதுத் தேர்வு முடிவுகள் வெளி வந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. 6236 மாணவர்கள் 96.03 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில  அளவில் 11 ஆவது இடத்தைப் பெற்றுள்ளனர்.   கடந்த ஆண்டு தேர்ச்சி விகித மானது 91.19 சதவிகிதம் பெற்று மாநில அளவில் 37 ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.  மாநில அளவில் 6 ஆவது இடம் அதேபோல் அரசுப் பள்ளிகள் மாநில அளவில் 94.93 சதவீதம் தேர்ச்சி பெற்று ஆறாவது இடத்தை பிடித்துள்ளன. கடந்தாண்டு அரசுப் பள்ளி அளவில் 30 ஆவது இடத்தை பிடித்திருந்தது. 10 அரசுப்  பள்ளிகள் 100% தேர்ச்சி விகிதத்தை  பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு களை விட, இம்முறை பன்னி ரண்டாம் வகுப்பு தேர்ச்சி விகி தத்தில் பல மடங்கு முன்னேறி இருப்பது சாதனையாக பார்க்கப்படு கிறது.  மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி. சுபாஷினி, தலைமையாசிரியர்கள், ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர் மற்றும்  மாணவர்கள் கூட்டு முயற்சியில் இந்த சாதனையைப் பெற்றுள்ளனர்.  

மாவட்ட கல்வி தன்முனைப்புத் திட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி யரின் முன்னெடுப்பில் பள்ளிக்கல்வி துறையுடன் இணைந்து மாவட்ட கல்வி தன்முனைப்புத் திட்டம் என்றொரு திட்டம் செயல்பட்டு வரு கிறது. இத்திட்டமானது அரசுப்  பள்ளி மாணவர்களின் திறமைகள், தனி ஆளுமை, கூட்டு மனப்பான்மை,  வளாக கல்வி, குறைந்தபட்ச கற்றல் திறன் மேம்பாடு உள்ளிட்ட வைகளில் கவனம் செலுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் காலாண்டு தேர்வு எழுதும்போதே தேர்ச்சி பெறாத மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் தேர்ச்சி பெறுவதற்குரிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு, அவர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய அளவில் கையேடு வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த முயற்சியானது மிகச் சிறந்த வகையில் பலன் அளித்துள்ளது.  மேலும், இத்திட்டத்தின் மூலம்  மாணவர்கள்-ஆசிரியர் உறவு முறை, கல்வி வளாகத்திற்குள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வது உள்ளிட்ட நற்பண்புகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.  இது போன்ற திட்டங்கள் செயல்ப டுத்தப்படுவதால் கல்வி வளர்ச்சி யில் நல்ல முன்னேற்றம் அடைவ தாக கல்வியாளர்கள் கருதுகின்றனர்.