நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களில் உள்ள மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள், 2022 ஜனவரி 19ஆம்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். மக்களின் உடல்நலம் மற்றும் மருத்துவம், தொழிலாளர்கள், களப்பணியாளர்கள் ஆகிய அனைத்து பகுதியினரின் பிரச்சனைகள் தொடர்பான 16 அம்சக் கோரிக்கைகளை ஒன்றியஅரசு, மாநில அரசுகள் மற்றும் நிர்வாகங்கள் முன்வைத்து இவ்வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. நாட்டின் பல்வேறு துறைகளில் விற்பனை அபிவிருத்திப் பணியாளர்கள் இன்று பணியில் உள்ளனர். இதில் மருந்து, மருந்து உபகரணங்கள், பெயிண்ட் , நுகர்வோர் பயன்பாட்டு பொருட்கள் உட்பட 11 துறைகள் அடங்கும். அனைத்து துறைகளிலும் ஒன்றிய அரசாங்கத்தின் கார்ப்பரேட் நல, மக்கள் விரோத கொள்கைகள் காரணமாக அத்துறைகள் மட்டுமல்லாமல் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் சாதாரண மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்
சுகாதாரம், உடல்நலம், மருந்துத்துறை - இன்றைய நிலைமை
கோவிட்-19 வைரஸ் தொற்றுநோயின் தொடர்ச்சியான அலைகளைக் கருத்தில் கொண்டால் , இந்த வேலைநிறுத்தம் மிகவும் பொருத்தமான நேரத்தில் நடைபெறுகிறது என்பது ஊர்ஜிதம் ஆகிறது. கோவிட் நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள் ஆகியவை கடந்த 2 வருடங்களில் தட்டுப்பாடானதும், இதனால் அவை கள்ளச்சந்தையில் விற்கப்பட்டன. மக்கள் சிகிச்சைக்காகப் பெரும் அல்லல் பட்டனர். இதற்கான உண்மைக் காரணம் என்ன ? இந்திய காப்புரிமைச் சட்டத்தில் தெளிவான விதிமுறைகள் இருந்தும், இந்திய அரசாங்கம் தற்போதுள்ள சில கோவிட்-19 மருந்துகள் (உதாரணம் - ரெம்டெசிவிர்) அல்லது தடுப்பூசிகள் (கோவாக்சின், கோவிஷீல்ட்போன்றவை) காப்புரிமையை ரத்துசெய்து, ‘கட்டாய உரிமம்’ வழங்குவதன் மூலம் இந்த மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. உலகில் தடுப்பூசி உற்பத்தியில் முன்னணியில் உள்ள நமது பொதுத்துறை நிறுவனங்களை இதற்கு பயன்படுத்தவோ, அல்லது தனியார் இந்திய நிறுவனங்களுக்கு அந்த தயாரிப்பு உரிமம் வழங்கவோ இல்லை. எனவே, உச்சக்கட்டத்தின் போது மிகமோசமான நிலைமையை நாம் சந்திக்க நேரிட்டோம். இதைத் தவிர, காசநோய் போன்ற பிற கொடிய நோய்களும் நாடு முழுவதும் பரவலாக உள்ளன, இதற்கு பழைய ‘ஜெனரிக்’ மருந்துகள் பல-மருந்து எதிர்ப்பு (Multidrug Resistant)என்ற வரையறைக்குள் வந்து விட்டதனால் பயனற்றவையாக போய்விட்டன. பெடாகுலின் மற்றும் டெலாமனிட் போன்ற காப்புரிமை பெற்ற மருந்துகள் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்த மருந்துகள் அரிதாகவே கிடைக்கின்றன; எந்த ஒரு இந்திய உற்பத்தியாளரும் இந்த மருந்துகளை ‘காப்புரிமை பாதுகாப்பு’ என்ற பெயரில் தயாரிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
இதனால்இறக்கும் நூற்றுக்கணக்கான நோயாளிகள், இந்த மருந்து உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டியுள்ளது. ஏகபோகங்களின் லாபத்தை விட மக்கள்நலன் மேலோங்க வேண்டும், வெளி நாட்டு படையெடுப்பில் இருந்து மட்டுமின்றி, உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நோய்களில் இருந்தும் குடிமக்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது என்று களப்பணியாளர்கள் இயக்கம் வாதிடுகிறது. மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் மீதான ஜிஎஸ்டியிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. தற்போது கோவிட் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் பயன்படுத்தும் மாஸ்க்குகள், சானிடைசர்கள், கிருமிநாசினிகள், மருத்துவர்கள், செவிலி யர்கள், பணியாளர்கள் பயன்படுத்தும் உபகர ணங்கள், நோய்க்கான மருந்துகள் ஆகியவை அனைத்தும் 12 முதல் 18 சதவீதம் வரி வரம்பிற்கு உட்பட்டவை. இதிலிருந்து ஒன்றிய அரசின் கோவிட் நோய் ஒழிப்பின் உண்மை நிலைமையை நாம் புரிந்து கொள்ளலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5 சதவீதத்தை சுகாதாரத்துறைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் உற்பத்திக்காக அனை த்து பொதுத்துறை மருந்து மற்றும் தடுப்பூசி நிறுவனங்களின் மறுமலர்ச்சி ஏற்பட போது மான நிதிஒதுக்கீடு செய்யப்பட வேண்டும், விலைக் கட்டுப்பாடு மூலம் மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் விலைகளைக் குறைக்க வேண்டும்என்றகோரிக்கைகள் வைக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் உலகளாவிய சுகா தாரப் பாதுகாப்பு, அத்தியாவசிய மருந்துகள், அனைவருக்கும் கிடைக்கவும் வழிசெய்யும்.
மக்கள் - தொழிலாளர்களின் வாழ்வாதாரம், தனியுரிமை மேல் தாக்குதல்
தொழிலாளர்களை மேலும் அடிமைப் படுத்தும் நோக்கத்தோடு 44 தொழிலாளர் நலச்சட்டங்கள் நீக்கப்பட்டு, 4 தொழிலாளர் குறியீடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை முழுக்க முழுக்க நிர்வாகங்கள் நலன்சார்ந்த வை. இதில் மருந்து விற்பனை பிரதிநிதிகளின் நலனுக்கு பிரத்தியேகமாக இருந்த ‘விற்பனை அபிவிருத்தி பணியாளர் சட்டம், 1976ம் அடங்கும். ஆகவே, நான்கு சர்ச்சைக்குரிய தொழிலாளர் குறியீடுகளை அகற்ற வேண்டும் என்று வேலைநிறுத்தம் கோருகிறது. ஒன்றிய அரசாங்கம் அர்த்தமற்ற டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவித்து வருகிறது. இன்று புதிதாக உருவாக்கப்பட்டு வரும் டிஜிட்டல் நடைமுறைகள், பெருநிறுவனங்கள் மக்கள் மற்றும் தொழிலாளர்களின் தனிப்பட்ட களங்களுக்குள் ஊடுருவுவதை நாம் பார்க்கிறோம். தனியுரிமை ( Right to privacy) என்பது பறிக்கப்பட்டு, ஒருவரின் நடமாற்றம், இயக்கம், நடவடிக்கைகள் ஆகிய அனைத்தும் பெருநிறுவனங்களால் கண்காணிக் கப்படுகிறது. சாமானியர்கள், நோயாளிகள், மருத்து வர்கள், வேதியியலாளர்கள் மற்றும் மருந்து வியாபாரிகள் கூட இத்தகைய கண்காணிப்பின் எல்லைக்குள் வருகிறார்கள். அத்தகைய கண்கா ணிப்பு மூலம் உருவாக்கப்படும் (தங்கள் செயல்கள், விருப்பங்கள் மற்றும் தேர்வுகள்) மக்கள், அத்தகைய தரவுகளை அறியவோ அல்லது அணுகவோ இல்லை, பெருநிறு வனங்கள் அதைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து, தங்கள் தனிப்பட்ட வணிக நலனுக்காகப் பயன்படுத்துகின்றனர். 2021 டிசம்பரில் வெளியிடப்பட்ட தரவுப் பாதுகாப்பு மசோதா, நாடாளுமன்றக் கூட்டுக் குழு அறிக்கையின் அடிப்படையில், எப்எம்ஆர்ஏஐ புகழ்பெற்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி எதிர் இந்திய யூனியன் ‘தனியுரிமைத் தீர்ப்பை’ நிலைநிறுத்தியுள்ளது. எனவே, இந்த நாட்டின் பொது மக்கள் மற்றும் தொழி லாளர்களுக்கு தனியுரிமை உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும், முன்மொழியப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தில், எந்தவொரு இணைய அடிப்படையிலான கண்காணிப்பு அகற்றப்பட வேண்டும், தவறு செய்யும் முதலாளிகள் மற்றும் ஏஜென்சிகளுக்கு தண்டனை வழங்கும் விதிகளுடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. நான்கு சர்ச்சைக்குரிய தொழிலாளர் குறியீடுகளை அகற்றுவது அல்லது அர்த்த மற்ற டிஜிட்டல் கண்காணிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற பிரச்சனைகள் களப்பணியாளர்களின் நலன் மட்டுமல்ல, இந்த நாட்டு மக்களின் பொது நலனுடன் தொடர்புடையவை.
விற்பனை மேம்பாட்டு ஊழியர்களின் பிரச்சனைகள்
சட்டரீதியாக வேலைநிர்ணயம், வேலை நேரம் அறிவிக்கப்படாத சூழலில், மருந்து விற்பனை பிரதிநிதிகள் பல்வேறு வகையான துன்புறுத்தல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இக்காலகட்டத்தில், விற்பனை தொடர்பான வேலைஇழப்பு, ஊதியக் குறைப்பு களுக்கு அவர்கள் உள்ளாகின்றனர். நிறு வனத்திற்கு விற்பனையைக் கொண்டு வரு வதற்கு அவர்கள் பல அர்ப்பணிப்பை செய்தா லும், விற்பனை மேம்பாட்டு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் போதுமான ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டை நிர்வாகங்கள் வழங்குவதில்லை. அனைத்து களப்பணியாளர்களுக்கும் சட்டப்பூர்வ பணி விதிகளை வகுக்க வேண்டும் என்ற அவர்களின் நீண்டகால கோரிக்கைக்கு ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கவும்,மாநில அரசுகள் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26000 மாதாந்திர சம்பளமாக நிர்ணயம் செய்தல், அவர்களுக்கு பொருந்தக் கூடிய அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் நடைமுறைப் படுத்த மற்றும் அவர்களின் பணியிடங்களுக்கு தடையின்றி செல்வதற்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. எனவே, ஜனவரி 19ஆம் தேதி வேலை நிறுத்தத்தில், நாடு முழுவதும் உள்ள அனைத்துத் துறை விற்பனை அபிவிருத்தி பணியாளர் களும், கோவிட் நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, ஐநூறுக்கும் மேற்பட்ட பெரு,சிறுநகரங்களில் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அவர்களின் கோரிக்கைகள் மக்களின், தொழிலாளர்களின் மிக முக்கிய மான பொதுவான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்கோரிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. ஆகவே, இந்த வேலைநிறுத்தம் தேசிய அள விலான மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போராட்டமாக மாறுகிறது. இந்த வேலைநிறுத்தம் வெற்றி அடைய அனைத்து பகுதி மக்களின் ஆதரவை நாடுகிறோம்.