மா விவசாயிகளுக்கு 4ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க கோரி மனு
வேலூர், ஜூன் 9 - வேலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட மா விவசாயிகள் கூட்டமைப்பு (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம்) சார்பில் கோபால.ராசேந்திரன், வெங்கடேசன் ஆகியோர் கூட்டத்தில் மனு அளித்தனர். அம்மனுவில், வேலூர் மாவட்ட மா விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளாக விளைச்சல் குறைவு நோய் தாக்கம் போன்றவற்றால் கடும் பாதிப்புக்கு ஆளாகி யுள்ளனர். மேலும் 25 ஆண்டுகளாக ஆந்திர எல்லையில் உள்ள மாம் பழக்கூழ் தொழிற்சாலை நம்பித்தான் காட்பாடி, வாணியம்பாடி, அணைக்கட்டு, பேரணாம் பட்டு, குடியாத்தம், கே.வி. குப்பம், பரதராமி பகுதி களை சேர்ந்த மா விவசாயிகள், மாங்காய் களை விற்பனை செய்து வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் மாங்காய் விலை வீழ்ச்சி காரணமாக ஆந்திர அரசு பழச்சாறு தொழிற்சாலைகள் மூலம் டன் ஒன்றுக்கு ரூ.8 ஆயி ரம் வழங்குகிறது. அதே போல் அம்மாநில அரசு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 4 ஆயி ரம் கொடுக்க முடிவு செய்து ள்ளது. அதனால் அங்கு நமது மாநில விவசாயிகள் மாங்காய்களை வாங்கு வதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு மாம்பழங்கள் கெட்டுபோவதற்குள் விற்பனை செய்யும் வகையில் ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும் ஆந்திரா போல் டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு தமிழ் நாடு அரசு வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ள னர்.