சாத்தான்குளம் தந்தை, மகள் கொலை வழக்கு காவல் ஆய்வாளர் ஜாமீன் கோரி மனு
மதுரை, ஏப்.22- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பால கிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து உள்ளிட்ட 9 பேரை சிபிஐ கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது. 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ள, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சக்திவேல் முன்பாக செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரியதால் வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.