tamilnadu

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்குக!

சென்னை, மார்ச் 10- சத்துணவு ஊழியர்க ளுக்கும் குடும்ப பாதுகாப்பு டன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் சார்பில்  தமிழ்நாடு முதலமைச்சரிடம் மனு வழங்கும் இயக்கம்  சென்னையில் வெள்ளி யன்று (மார்ச் 10) நடை பெற்றது. மாநிலத் தலைவர் ஆர்.கலா தலைமை தாங்கி னார். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம் போராட்டத்தை துவக்கி வைத்தார். பொதுச் செயலாளர் அ.மலர்விழி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

சத்துணவு திட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேல்  உள்ள காலிப் பணியிடங்கள்  நிரப்ப வேண்டும், அனை வருக்கும் காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும், அனைத்து அரசு பள்ளிக ளிலும் நவீன சமையலறை, எரிவாயு அடுப்பு, தரமான குடிநீர், தேவையான பாத்தி ரங்கள் என அனைத்து வசதி களும் இருப்பதால் காலை சிற்றுண்டியை பள்ளி சத்து ணவு திட்டத்தில் இணைத்து செயல்படுத்த வேண்டும். 40 ஆண்டுகளாக சத்துணவு திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றபின் வாழ்வாதாரத்திற்காக அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை, ஒட்டு மொத்த தொகை என்ற பெயரில் அமைப்பாளருக்கு ரூ.1 லட்சமும். சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.50  ஆயிரமும் வழங்கப்படு வதை உயர்த்தி சத்துணவு, அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமாகவும், சமை யலர், சமையல் உதவி யாளர்களுக்கு ரூ.3 லட்ச மாகவும் வழங்க வேண்டும், நாற்பது ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்தி வரும் பள்ளி சத்துணவுத் திட்டத்தில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் என்ற அடிப் படையில் குறைந்தபட்ச ஊதியத்திலும், ஓய்வூதிய மும் கிடைக்காத நிலையில் பணியாற்றி வரும் ஊழியர் களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று  அளித்த தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்ற வேண் டும்,  அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

மாநிலச் செயலாளர் சா.டானியல் ஜெயசிங், துணை பொதுச் செய லாளர்கள் ந.வெங்கடேசன், தெ.வாசுகி, சீ.காந்திமதி நாதன் (ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம்), ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் ஜி.பிரசன்னா, தலைமைச் செயலக சங்க  மாநிலச் செயலாளர் அரி சங்கர், அரசு ஊழியர் சங்க  வடசென்னை மாவட்டச்  செயலாளர் ம.அந்தோணி சாமி, தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் த.முத்துக்குமாரசாமி, சேப்பாக்கம் பகுதி தலை வர் ஜெ.வி.அருள் டேனி யல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். முன்னதாக சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பே.பேயத்தேவன் வர வேற்றார். மாநிலப் பொரு ளாளர் எம்.ஆர்.திலகவதி நன்றி கூறினார். பின்னர் சங்க நிர்வாகி கள் சோசியல் வெல்பேர் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, முதலமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு  அதிகாரி ராம் பிரதீப் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு  சென்று நடவடிக்கை எடுப் பதாக தெரிவித்துள்ளனர்.