சென்னை, செப்.23- நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடை பெறும் என தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்திருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்களன்று(செப்.23) தொடங்கி வரும் 30ஆம் தேதி வரை நடக்கிறது. விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவல கத்தில் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை அளித்தனர். வேட்புமனு தாக்கலை முன்னிட்டு வட்டாட்சியர் அலுவ லகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முன்ன தாக வட்டாட்சியர் அலுவலத்தில் செய்யப் பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக வட்டாட்சியரும் நியமிக்கப் பட்டுள்ளதாகக் கூறினார். வேட்பு மனு செய்ய வரும் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வரவேண்டும் என்றும் 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். புதுச்சேரி உப்பளம் சாலையிலுள்ள சுற்று லாத்துறை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலுக்கான அலுவலகம் அமைக்கப் பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக மன்சூர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சட்டமன்ற இடைத்தேர்தல் நடை பெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குசாவடிகளும் நாங்குநேரி தொகுதி யில் 299 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட வுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். 2 தொகுதிகளி லும் தலா 3 பறக்கும் படைகள், 3 நிலைக் குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடு படுவார்கள் என்றும் சத்யபிரதா சாகு குறிப் பிட்டுள்ளார். இடைத்தேர்தல் நடைபெற வுள்ள மாவட்டத்தின் மற்ற இடங்களில் தலா ஒரு பறக்கும் படை மற்றும் நிலைக் குழு தேர்தல் பணியில் ஈடுபடும் என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 721 ஆண்கள், ஒரு லட் சத்து 11 ஆயிரத்து 710 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் என 2 லட்சத்து 23 ஆயி ரத்து 456 வாக்காளர்கள் உள்ளனர் என்றும் நாங்குநேரி தொகுதியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 341 ஆண்கள், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 698 பெண்கள், மூன்றாம் பாலி னத்தவர் 3 பேர் என 2 லட்சத்து 57 ஆயிரத்து 042 வாக்காளர்கள் உள்ளனர் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.